சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! - ராஜ்நாத் சிங்
Sep 12, 2026, 01:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீனாவை எதிரியாக நாங்கள் கருதவில்லை! – ராஜ்நாத் சிங்

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 12:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது, 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக ஜனவரி  08  அன்று இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். அவருடன்  பாதுகாப்புத் துறை, டி.ஆர்.டி.ஓ, முப்படைகளின் தலைமையகம் மற்றும் பாதுகாப்பு உற்பத்தித் துறையைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் உயர்மட்டக் குழுவும் சென்றுள்ளது.

லண்டனில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, புலம்பெயர்ந்த இந்தியர்கள் ‘பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம்’ என்ற முழக்கங்களை எழுப்பி உற்சாகமாக வரவேற்றனர்.

லண்டனில் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

“சீனாவை எங்கள் எதிரியாக நாங்கள் கருதவில்லை, ஒருவேளை சீனா அவ்வாறு கருதுகிறது. நாங்கள் யாரையும் எதிரியாக கருதவில்லை… 2020ல், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, நமது பாதுகாப்புப் படைகள் காட்டிய துணிச்சல், இந்தியாவைப் பற்றிய சீனாவின் கண்ணோட்டம் மாறுவதற்கு அதுவே காரணமாக இருக்கலாம், இந்தியா பலவீனமாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். முன்பு பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்தோம், ஆனால் இப்போது பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்வதில் முதல் 25 நாடுகளில் இந்தியா உள்ளது என்றார்.

பிரிட்டனுடன் வளமான கூட்டுறவை இந்தியா விரும்புகிறது. இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே நல்லுறவு உள்ளது என்றார். இரு நாடுகளும் இணைந்து பெரிய காரியங்களைச் செய்ய முடியும்.  பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாகக் கூறினார்.

இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது என்றார். 2047-க்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். இதன் போது, ​​இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான மூலோபாய கூட்டுறவை லியுறுத்தினார்.

ராஜ்நாத் சிங் தனது பிரிட்டன் பயணத்தின் போது, ​​பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் மற்றும் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன் உட்பட பல தலைவர்களை சந்தித்தார்.

பின்னர், லண்டனில் உள்ள இந்தியா ஹவுஸில் இந்திய சமூகத்தினருடன் பாதுகாப்புத்துறை  அமைச்சர் கலந்துரையாடினார்.

Tags: Londondefence minister rajnath singh
Share
Tweet
SendShare
Previous Post

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

Next Post

குஜராத்தில் தொடங்கியது உண்மை கண்டறியும் சோதனை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies