பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி – பெங்களூரு இடையே, சிறப்பு இரயில் இயக்க உள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, தெற்கு இரயில்வே சார்பில் சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பொங்கல் பண்டிகையின் போது பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்க, திருச்சி – பெங்களூரு இடையே, சிறப்பு இரயில் இயக்கப்பட உள்ளது.
அதன்படி, பெங்களூரு – திருச்சி இடையே, பொங்கல் சிறப்பு இரயில் (வண்டி எண் – 06577), வரும் 12-ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு, பெங்களூருவில் இருந்து புறப்பட்டு, அதே நாள் இரவு 11.30 மணிக்கு திருச்சி சென்றடையும்.
மறுமார்க்கமாக, திருச்சி – பெங்களூரு இடையே, பொங்கல் சிறப்பு இரயில் வரும் 13-ஆம் தேதி அதிகாலை 4.45 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் மதியம் 12.00 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இந்த சிறப்பு இரயில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி கோட்டை, வழியாக செல்லும்.