முழு ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான இன்று, மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக்கில் 27-வது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இவ்விழாவில் உலகின் பல்வேறு இடங்களில் இருந்தும் இளைஞர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த சூழலில், இன்று மகாராஷ்டிரா மாநிலத்துக்குச் சென்றிருக்கும் பிரதமர் மோடி, நாசிக்கில் உள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனிடையே, சுவாமி விவேகானந்தருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அப்பதிவில், இந்தியாவின் ஆன்மிகம் மற்றும் கலாசாரங்களை உலக அரங்கில் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர். முழு ஆற்றல் மற்றும் சுறுசுறுப்பான சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் மற்றும் தகவல்கள் இளைஞர்களை எப்பொழுதும் ஊக்குவிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.
#WATCH | Maharashtra | Prime Minister Narendra Modi pays floral tribute to Swami Vivekananda in Nashik on his birth anniversary. pic.twitter.com/CE86fUNIQK
— ANI (@ANI) January 12, 2024