தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Jul 26, 2025, 07:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய  அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், பிரதமர் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இந்த சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமைத் தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு புதிதாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் பிரதமருடன், மக்களவை எதிர்கட்சித் தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அம்மனுவில் மத்திய அரசு சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இச்சட்டம் அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது. இதனால் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

ஆனால், நீதிபதிகளோ “எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்.

Tags: Election CommissionersAppointment LawDismiss pettionsupreme court
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி – என்ன காரணம்?

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies