தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 05:43 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய  அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், பிரதமர் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இந்த சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமைத் தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு புதிதாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் பிரதமருடன், மக்களவை எதிர்கட்சித் தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அம்மனுவில் மத்திய அரசு சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இச்சட்டம் அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது. இதனால் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

ஆனால், நீதிபதிகளோ “எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்.

Tags: supreme courtElection CommissionersAppointment LawDismiss pettion
Share
Tweet
SendShare
Previous Post

அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி – என்ன காரணம்?

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies