தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
Jun 14, 2026, 11:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 05:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்குத் தடை விதிக்க மறுப்புத் தெரிவித்துவிட்ட உச்ச நீதிமன்றம், மத்திய  அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது.

தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள், பிரதமர் பரிந்துரையின்படி குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு வந்தார்கள். இந்த சூழலில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக விதிகளை வகுக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தலைமைத் தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர், எதிர்கட்சி தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இதையடுத்து, தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு புதிதாக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தியது. அதன்படி, தேர்தல் கமிஷனர்களை நியமிக்க பிரதமர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்படும் என்றும், அக்குழுவில் பிரதமருடன், மக்களவை எதிர்கட்சித் தலைவர், பிரதமர் பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் இடம்பெறுவார் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று சட்டமாக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே, இச்சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அம்மனுவில் மத்திய அரசு சட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “இச்சட்டம் அதிகாரங்களை பிரித்து வழங்கும் நடைமுறைக்கு எதிரானது. இதனால் சட்டத்திற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

ஆனால், நீதிபதிகளோ “எதிர்தரப்பினரின் வாதங்களை கேட்காமல் சட்டத்துக்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறி, தடை விதிக்க மறுத்து விட்டனர். மேலும், இது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டிருக்கின்றனர்.

Tags: supreme courtElection CommissionersAppointment LawDismiss pettion
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி குறித்த தவறான கருத்து : துவாரகா,சிருங்கேரி சாரதா பீடங்கள் மறுப்பு!

Next Post

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தள்ளுபடி – என்ன காரணம்?

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies