அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!
Oct 25, 2025, 04:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

Web Desk by Web Desk
Jan 12, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி, நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

எனினும், விழாவில் கலந்துகொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்த சூழலில், இதுகுறித்த கேள்விக்கு விழா நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் அயோத்தி கோவில் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்குச் சமம் என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆவேசம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் மனம் உடைந்து போயிருக்கிறேன். ஸ்ரீராம் மந்திரின் அழைப்பை நிராகரிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மற்றும் தற்கொலை முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போர்பந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அர்ஜுன் மோத்வாடியா கூறுகையில், “பகவான் ஸ்ரீராமர் எங்கள் அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய தெய்வம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். இதுபோன்ற அரசியல் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் கூறுகையில், “அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும். அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ஸ்ரீராமர் மீது உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இராமர் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் இராமர் கோவில்களை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், இராமர் கோவில் கட்டுவதற்கு எதிராகவும், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஆதரவாகவும் நீதிமன்றத்தில் வாதாடியவர்களில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

Tags: CongressRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு – ஏன்?

Next Post

திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம்! – அண்ணாமலை

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies