அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!
Apr 29, 2026, 11:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி, நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

எனினும், விழாவில் கலந்துகொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்த சூழலில், இதுகுறித்த கேள்விக்கு விழா நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் அயோத்தி கோவில் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்குச் சமம் என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆவேசம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் மனம் உடைந்து போயிருக்கிறேன். ஸ்ரீராம் மந்திரின் அழைப்பை நிராகரிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மற்றும் தற்கொலை முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போர்பந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அர்ஜுன் மோத்வாடியா கூறுகையில், “பகவான் ஸ்ரீராமர் எங்கள் அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய தெய்வம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். இதுபோன்ற அரசியல் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் கூறுகையில், “அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும். அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ஸ்ரீராமர் மீது உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இராமர் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் இராமர் கோவில்களை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், இராமர் கோவில் கட்டுவதற்கு எதிராகவும், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஆதரவாகவும் நீதிமன்றத்தில் வாதாடியவர்களில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

Tags: CongressRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு – ஏன்?

Next Post

திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம்! – அண்ணாமலை

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies