அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!
Jun 14, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி புறக்கணிப்பு தற்கொலை முடிவு: கொந்தளிக்கும் காங்கிரஸ் தலைவர்கள்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 12, 2024, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி கோவில் கும்பாபிஷேகத்தில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது என்று அரிவித்திருப்பது தற்கொலை முடிவு என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கொந்தளித்து வருகிறார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில், 1,800 கோடி ரூபாய் செலவில் ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் திறப்பு விழா, கும்பாபிஷேகம், ராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளும்படி, நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

எனினும், விழாவில் கலந்துகொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் யாரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இந்த சூழலில், இதுகுறித்த கேள்விக்கு விழா நேரத்தில் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “அயோத்தி கோவில் கும்பாபிஷேக விழாவில் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளாது” என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்தான், காங்கிரஸ் கட்சியின் அயோத்தி கோவில் புறக்கணிப்பு முடிவு தற்கொலைக்குச் சமம் என்றும், இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் ஆவேசம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்ததால் மனம் உடைந்து போயிருக்கிறேன். ஸ்ரீராம் மந்திரின் அழைப்பை நிராகரிப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மற்றும் தற்கொலை முடிவு” என்று தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவராகவும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த போர்பந்தரைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. அர்ஜுன் மோத்வாடியா கூறுகையில், “பகவான் ஸ்ரீராமர் எங்கள் அன்புக்குரிய மற்றும் மரியாதைக்குரிய தெய்வம். இது நாட்டு மக்களின் நம்பிக்கை சார்ந்த விஷயம். இதுபோன்ற அரசியல் முடிவை காங்கிரஸ் எடுத்திருக்கக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக்விஜய் சிங்கின் சகோதரர் லக்ஷ்மண் சிங் கூறுகையில், “அயோத்தி ஸ்ரீராமர் கோவில் விவகாரத்தில் கட்சி எடுத்த முடிவு பொருத்தமற்றது. இந்த முடிவின் எதிரொலி தேர்தலில் தெரியும். அனைவரும் அயோத்திக்குச் செல்ல வேண்டும். நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் அங்கு செல்வோம். எங்கள் பக்தி ஸ்ரீராமர் மீது உள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்க, இராமர் இல்லை என்று மறுக்கும் அளவுக்கு காங்கிரஸ் கட்சி எப்போதும் இராமர் கோவில்களை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், இராமர் கோவில் கட்டுவதற்கு எதிராகவும், சன்னி வக்ஃப் வாரியத்துக்கு ஆதரவாகவும் நீதிமன்றத்தில் வாதாடியவர்களில் ஒருவர் என்பது கவனிக்கத்தக்கது.

Tags: CongressRam TempleAyodya
ShareTweetSendShare
Previous Post

தூத்துக்குடியில் மத்தியக்குழுவினர் 2-வது முறையாக ஆய்வு – ஏன்?

Next Post

திமுகவின் விளம்பர அரசியலுக்காக குழந்தைகளை பலிகடா ஆக்க வேண்டாம்! – அண்ணாமலை

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies