நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!
Jan 14, 2026, 11:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதல்வர் பதவியில் இருந்துதான் விலகி இருக்கிறேனே தவிர, தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகவில்லை. மேலும், நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. ஆகவே, ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல்வராக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, மத்திய பார்வையாளர்களை நியமித்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்படி பணிக்கப்பட்டது. அதன்படி, புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிவராஜ் சிங் சென்றபோது, பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால், சிவராஜ் சிங் மனநிலை என்ன? முதல்வராக இல்லாத நிலையில் கட்சி நிர்வாகிகள் அவரை எப்படி பார்க்கின்றனர்? அவரின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். அதற்காக, நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்வர்கள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.

அதேசமயம், நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என்று செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்.

நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றார்.

Tags: Madya PradeshSivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Next Post

ஜெயிலுக்கு போகும் திமுக மாஜி எம்.எல்.ஏ-க்கள்!

Related News

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies