நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!
Jul 26, 2025, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நான் முதல்வர் பதவியில் இருந்துதான் விலகி இருக்கிறேனே தவிர, தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகவில்லை. மேலும், நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கிறேன் என்று மத்தியப் பிரதேச மாநில முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் கூறியிருக்கிறார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மத்தியப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. ஆகவே, ஏற்கெனவே 4 முறை முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சௌகான்தான் மீண்டும் முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், முதல்வராக புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க பா.ஜ.க. தலைமை முடிவு செய்தது. எனவே, மத்திய பார்வையாளர்களை நியமித்து முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும்படி பணிக்கப்பட்டது. அதன்படி, புதிய முதல்வராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் பிறகு, பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சிவராஜ் சிங் சென்றபோது, பெண்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதனால், சிவராஜ் சிங் மனநிலை என்ன? முதல்வராக இல்லாத நிலையில் கட்சி நிர்வாகிகள் அவரை எப்படி பார்க்கின்றனர்? அவரின் எதிர்காலம் என்ன? என்ற கேள்விகள் எழுந்தன.

இந்த நிலையில், பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “தற்போது நான் முன்னாள் முதல்வர் என்று அழைக்கப்படுகிறேன். அதற்காக, நான் நிராகரிக்கப்பட்ட முதல்வர் அல்ல. நீண்ட காலமாக முதல்வராக இருக்கும் நிலையில் மக்கள் எதிர்ப்பு காரணமாக முதல்வர்கள் ராஜினாமா செய்யும் சம்பவம் பலமுறை நடந்திருக்கிறது.

அதேசமயம், நான் எங்கே சென்றாலும் மக்கள் என்னை மாமா என்று செல்லமாக அழைக்கின்றனர். மக்கள் எனக்காக குரல் கொடுக்கும்போது, நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறேன்.

நான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதால், தீவிர அரசியல் செயல்பாட்டில் இருந்து விலகுகிறேன் என்ற அர்த்தம் கிடையாது. நான் எந்தவிதமான பதவிக்காகவும் அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே வந்திருக்கிறேன்” என்றார்.

Tags: Madya PradeshSivaraj Singh Chouhan
ShareTweetSendShare
Previous Post

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Next Post

ஜெயிலுக்கு போகும் திமுக மாஜி எம்.எல்.ஏ-க்கள்!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies