யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

யேசுதாஸ் பிறந்த நாளில் நடந்த அதிசயம்!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 12:33 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கே.ஜே.யேசுதாஸ், இந்தியர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு மாமனிதர். காரணம், தனது வசீகர குரலால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கட்டிப்போட்டவர்.

கேரளாவின் ஃபோர்ட் கொச்சியில் இலத்தீன் கத்தோலிக்கக் குடும்பத்தில் அகஸ்டைன் யோசப்குக்கும், அலைசுகுட்டிக்கும் மகனாக பிறந்தவர் யேசுதாஸ். அவரது தந்தை மலையாளத்தில் பிரபல செவ்விசைக் கலைஞர் ஆவார். யேசுதாஸ் ஆரம்பத்தில், இசைப்பயிற்சியை தந்தையிடமே கற்றார். பின்னர் இசைக்கல்லூரியில் பயின்றார்.

யேசுதாஸ் தனது திரைப்பட வாழ்க்கையை கால்பாடுகள் மலையாளத் திரைப்படம் மூலம் துவங்கினார். இந்த படத்திலேயே தனது முதல் பாடலை பாடினார். அன்று துவங்கய அவரது கலைப்பயணம் இன்று வைர தொடர்கிறது. இதுவரை 50 ஆண்டுகள் திரைவாழ்வில் மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காளம், குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம், துளு, மலாய், உருசியா, அரபி, இலத்தீன், ஆங்கிலம் ஆகிய பல்வேறு மொழிகளில் 50,000 பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

சிறந்த திரைப்பட பின்னணிப் பாடகராக 7 முறை தேசிய விருதும், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா , மேற்கு வங்க அரசுகளிடம் 45 முறை சிறந்த திரைப்பாடகராகவும் விருதுகள் பெற்றுள்ளார்.

யேசுதாசுக்கு பிரபா என்ற மனைவியும் வினோத், விஜய், விசால் என்ற மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகன் விஜய் யேசுதாஸ் தமது தந்தையைப் போலவே திரைப்படப் பாடகராக உள்ளார். ஆரம்பத்தில் சென்னை மற்றும் திருவனந்தப்புரத்தில் வசித்து வந்த யோசுதாஸ், தற்போது, ஐக்கிய அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

கடந்த 10-ம் தேதி யேசுதாஸ்-க்கு பிறந்த நாள். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவர் மறக்காமல் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்வது வழக்கம். காரணம், யேசுதாஸ் தீவிர ஐயப்ப பக்தர் ஆவார். இந்த நிலையில், இந்த ஆண்டு, அவரது பிறந்த நாளையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோவிலில், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, திருக்கோவில் பிரசாதம், யேசுதாசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

யேசுதாசின் பாடல்கள் ஒலித்த பின்புதான் ஐயப்பன் கோவிலில் காலை நடை திறப்பதும், இரவு நடை சாத்துவதும் வழக்கம்.

Tags: cinema newsK. J. Yesudas
Share
Tweet
SendShare
Previous Post

மக்களை துச்சமாக கருதுவது முறையற்ற செயல் – நாராயணன் திருப்பதி கண்டனம்

Next Post

நான் அரசியலில் இருந்து விலகவில்லை: சிவராஜ் சிங் சௌஹான்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies