மக்களே உஷார்! புதியவகை மோசடி!
Jan 14, 2026, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களே உஷார்! புதியவகை மோசடி!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் நடந்துவருகிறது.

ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி எனப் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது குரல் மாற்றி பேசி பணத்தை பிடுங்கும் மோசடி நடைபெற்று வருகிறது.

அதாவது AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பத்தை (AI voice cloning technology) பயன்படுத்தி மோசடிக்காரர்கள் டார்கெட் செய்யப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குறிய நபர்களைப் போல நடித்து அவர்களின் பணம் அல்லது தனிநபர் விவரங்களை திருடி வருவது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

எனினும் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. உங்களது உடன் பணிபுரிபவர்கள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து வழக்கத்திற்கு மாறான நேரங்களில் இருந்து போன் கால்கள் வரும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள்.

பெரும்பாலான நேரங்களில் மோசடிக்காரர்கள் உங்களை விரைவான முடிவுகள் எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள். உங்களுடைய அன்புக்குரியவர்கள் பிரச்சனையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக பணம் தேவை என்பது போன்ற பொய்யையும் சொல்வார்கள்.

AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பம் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், அது இன்னும் மனிதனைப் போல அச்சு அசலாக மாறவில்லை. எனவே ரோபோடிக் போன்ற பேச்சு அல்லது விசித்திரமான உச்சரிப்பு போன்றவை ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலமாக நீங்கள் ஒரு உண்மையான நபரிடம் பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு தெரியாத மற்றும் நீங்கள் நம்பாத ஒரு நபரிடம் ஒருபோதும் பணமோ அல்லது சோஷியல் செக்யூரிட்டி நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை போன் மூலமாக தர வேண்டாம். எந்த ஒரு நியாயமான நிறுவனமும் இது போன்ற தகவல்களை போனில் கேட்காது.

உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபரிடம் இருந்து வரக்கூடிய ஒரு போன் காலுக்கு நீங்கள் பதில் அளித்தால், கட்டாயமாக அது அவர்கள் தான் என்று ஊகிக்க வேண்டாம். உண்மையாகவே அது அவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்கலாம்.

உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து பின் வாங்கி சற்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். இந்த விஷயம் குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் என்று காலரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக யோசிக்கவும்.

Tags: ai voice
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 2 மணி நேர சிறப்பு இடைவேளை!

Next Post

2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies