மக்களே உஷார்! புதியவகை மோசடி!
Aug 2, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களே உஷார்! புதியவகை மோசடி!

Murugesan M by Murugesan M
Jan 13, 2024, 03:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகெங்கிலும் தற்போது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. எந்த அளவிற்குத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளதோ அந்த அளவிற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடிகளும் நடந்துவருகிறது.

ஓடிபி மோசடி, போலி எஸ்.எம்.எஸ் மோசடி, QR குறியீடு மோசடி எனப் பல மோசடிகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தற்போது குரல் மாற்றி பேசி பணத்தை பிடுங்கும் மோசடி நடைபெற்று வருகிறது.

அதாவது AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பத்தை (AI voice cloning technology) பயன்படுத்தி மோசடிக்காரர்கள் டார்கெட் செய்யப்பட்ட நபர்களின் நம்பிக்கைக்குறிய நபர்களைப் போல நடித்து அவர்களின் பணம் அல்லது தனிநபர் விவரங்களை திருடி வருவது தொடர்ந்து அதிகரித்து காணப்படுகிறது.

எனினும் இது போன்ற மோசடிகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. உங்களது உடன் பணிபுரிபவர்கள் அல்லது அன்புக்குரியவர்களிடமிருந்து வழக்கத்திற்கு மாறான நேரங்களில் இருந்து போன் கால்கள் வரும்பொழுது எச்சரிக்கையாக இருங்கள்.

பெரும்பாலான நேரங்களில் மோசடிக்காரர்கள் உங்களை விரைவான முடிவுகள் எடுப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள். உங்களுடைய அன்புக்குரியவர்கள் பிரச்சனையில் இருப்பதாகவும், அவர்களுக்கு உடனடியாக பணம் தேவை என்பது போன்ற பொய்யையும் சொல்வார்கள்.

AI வாய்ஸ் குளோனிங் தொழில்நுட்பம் நல்ல முன்னேற்றம் அடைந்து இருந்தாலும், அது இன்னும் மனிதனைப் போல அச்சு அசலாக மாறவில்லை. எனவே ரோபோடிக் போன்ற பேச்சு அல்லது விசித்திரமான உச்சரிப்பு போன்றவை ஏதேனும் இருந்தால் எச்சரிக்கையாக இருங்கள். இதன் மூலமாக நீங்கள் ஒரு உண்மையான நபரிடம் பேசவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு தெரியாத மற்றும் நீங்கள் நம்பாத ஒரு நபரிடம் ஒருபோதும் பணமோ அல்லது சோஷியல் செக்யூரிட்டி நம்பர், பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்றவற்றை போன் மூலமாக தர வேண்டாம். எந்த ஒரு நியாயமான நிறுவனமும் இது போன்ற தகவல்களை போனில் கேட்காது.

உங்களுக்கு நன்றாக தெரிந்த ஒரு நபரிடம் இருந்து வரக்கூடிய ஒரு போன் காலுக்கு நீங்கள் பதில் அளித்தால், கட்டாயமாக அது அவர்கள் தான் என்று ஊகிக்க வேண்டாம். உண்மையாகவே அது அவர்கள் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு ஒரு சில கேள்விகளை அவர்களிடம் நீங்கள் கேட்கலாம்.

உடனடியாக ஒரு முடிவு எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதிலிருந்து பின் வாங்கி சற்று பொறுமையாக யோசித்துப் பாருங்கள். இந்த விஷயம் குறித்து நீங்கள் யோசிக்க வேண்டும் என்று காலரிடம் சொல்லிவிட்டு சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நன்றாக யோசிக்கவும்.

Tags: ai voice
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 2 மணி நேர சிறப்பு இடைவேளை!

Next Post

2 மாதங்களில் 1,000 கேலோ இந்தியா மையங்கள்: அனுராக் தாக்கூர்!

Related News

போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விலகி இருக்க வேண்டும் – பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies