ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!
Sep 29, 2025, 11:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜனவரி 16-ம் தேதி கேரளாவில் ரோடு ஷோ நடத்தும் பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 13, 2024, 04:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2 நாள் பயணமாக ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். தொடர்ந்து, அன்றையதினம் மாலை கொச்சியில் பிரம்மாண்ட ரோடு ஷோவை நடத்தும் பிரதமர், மறுநாள் குருவாயூரில் நடைபெறும் நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் கலந்துகொள்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஜனவரி 2 மற்றும் 3-ம் தேதிகளில் 2 நாள் பயணமாக தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். 2-ம் தேதி திருச்சியில் விமான நிலைய முனையக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர், மாலை லட்சத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார்.

பின்னர், அன்றையதினம் இரவை லட்சத்தீவிலேயே கழித்த பிரதமர் மோடி, மறுநாளான ஜனவரி 3-ம் தேதி காலையில் கடற்கரையில் வாக்கிங் மற்றும் ஸ்நோர்கெலிங் செய்து மகிழ்ந்தார். தொடர்ந்து, மாலையில் கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பா.ஜ.க. மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டார்.

இந்த நிலையில், மீண்டும் 2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி, ஜனவரி 16-ம் தேதி கேரளாவுக்குச் செல்கிறார். விமானம் மூலம் மாலை 5 மணிக்கு கொச்சி கடற்படை விமான நிலையத்தைச் சென்றடையும் பிரதமர், மாலை 6 மணிக்கு மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் நீள ரோடு ஷோவை நடத்துகிறார்.

இந்த ரோடு ஷோ, மருத்துவமனை சாலை, பார்க் அவென்யூ வழியாக எர்ணாகுளம் விருந்தினர் மாளிகையை சென்றடையும். இதற்காக திறந்த வாகனம் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்நிகழ்வுக்காக சுமார் 50,000 கட்சித் தொண்டர்களை திரட்டி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பா.ஜ.க. திட்டமிட்டிருக்கிறது.

அன்றையதினம் இரவு கொச்சியில் தங்கும் பிரதமர் மோடி, ஜனவரி 17-ம் தேதி நடைபெறும் சுரேஷ் கோபியின் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள ஹெலிகாப்டரில் குருவாயூர் செல்கிறார். திருமண விழாவுக்கு முன்னதாக, காலை 8 மணியளவில் குருவாயூர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்துவார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த திருமண விழாவில் பிரதமர் மோடியுடன், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது.

திருமண விழா முடிந்ததும், கொச்சி திரும்பும் பிரதமர் மோடி, வில்லிங்டன் தீவில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் வசதி மற்றும் உலர் கப்பல்துறையை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். காலை 11 மணிக்கு மரைன் டிரைவில் உள்ள 7,000 சக்தி கேந்திரா பொறுப்பாளர்களை சந்திக்கிறார். பினனர், பிரதமர் மோடி விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.

Tags: PM ModiKeralaJanuary 16Actor Suresh Gopi
ShareTweetSendShare
Previous Post

உக்ரைனுக்கு ராணுவ உதவியாக 2.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகள் வழங்கிய ரிஷி சுனக்!

Next Post

இமாச்சலப் பிரதேசத்தில் திடீர் நிலநடுக்கம்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies