கேரள முதல்வர் மகள் நிறுவனம்: விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வர் மகள் நிறுவனம்: விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 05:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நிறுவனத்துக்கு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திலிருந்து 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர், கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Exalogic) என்கிற பெயரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஐ.டி. நிறுவனமானது, தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் மற்றும் மென்பொருள் சேவைகள் குறித்தும், பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வீணாவின் ஐ.டி. நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை.

இந்த சூழலில், கடந்த 3 ஆண்டு காலமாக சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் மற்றும் வீணாவின் சொந்தக் கணக்கிற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் என தொடர்ந்து பணப் பரிவர்த்தனை நடந்து வந்தது.

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணா விஜயனுக்கு சுமார் 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. எனவே, சேவைகள் வழங்கப்படாமலேயே இவ்வளவு பணம் அனுப்பப்பட காரணம் என்ன என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ​அரசியல்வாதிகள், கோவில்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களில், பணம் பெற்றவர்களின் பெயர்கள் “பி.வி.”, “கே.கே.”, “ஐ.கே.” மற்றும் “ஆர்.சி.” போன்ற சுருக்கமான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவை, பினராயி விஜயன், ஐ.யு.எம்.எல். தலைவர் குன்ஹாலி குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் சுருக்கங்களாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் நிறுவனம், சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, 3 பேர் கொண்ட குழுவை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்.சி.ஏ.) அமைத்திருக்கிறது.

இக்குழுவில், பெங்களூரு நிறுவனங்களின் துணைப் பதிவாளர் பி.எஸ்.வருண், சென்னை மண்டல இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணிபுரியும் கே.எம்.சங்கர் நாராயண் மற்றும் புதுச்சேரி ஆர்.ஓ.சி. ஏ.கோகுல்நாத் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Tags: Company ProbeCentral Govt OrdersKeralaCM Pinarayi vijayanDaughter Veena
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டம்!

Next Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies