கேரள முதல்வர் மகள் நிறுவனம்: விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரள முதல்வர் மகள் நிறுவனம்: விசாரிக்க மத்திய அரசு குழு அமைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 13, 2024, 05:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நிறுவனத்துக்கு, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திலிருந்து 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரிக்க, மத்திய அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன். இவர், கடந்த பல ஆண்டுகளாக கேரளாவில் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Exalogic) என்கிற பெயரில் தனியார் ஐ.டி. நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஐ.டி. நிறுவனமானது, தகவல் தொழில்நுட்பம், மார்க்கெட்டிங் மற்றும் மென்பொருள் சேவைகள் குறித்தும், பல முன்னணி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கும் நிறுவனமாகவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனம், கொச்சியில் செயல்பட்டு வரும் கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சி.எம்.ஆர்.எல்.) என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்பட ஒப்பந்தம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வீணாவின் ஐ.டி. நிறுவனம் எந்த சேவையும் வழங்கவில்லை.

இந்த சூழலில், கடந்த 3 ஆண்டு காலமாக சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணாவின் நிறுவனத்திற்கு 3 லட்சம் ரூபாய் மற்றும் வீணாவின் சொந்தக் கணக்கிற்கு சுமார் 5 லட்சம் ரூபாய் என தொடர்ந்து பணப் பரிவர்த்தனை நடந்து வந்தது.

அந்த வகையில், கடந்த 3 ஆண்டுகளில் சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தில் இருந்து வீணா விஜயனுக்கு சுமார் 1.72 கோடி ரூபாய் பணப் பரிவர்த்தனை நடந்திருக்கிறது. எனவே, சேவைகள் வழங்கப்படாமலேயே இவ்வளவு பணம் அனுப்பப்பட காரணம் என்ன என்பது குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இது தொடர்பாக, சி.எம்.ஆர்.எல். நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சுரேஷ் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, ​அரசியல்வாதிகள், கோவில்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு பணம் செலுத்திய விவரங்கள் அடங்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர்.

அந்த ஆவணங்களில், பணம் பெற்றவர்களின் பெயர்கள் “பி.வி.”, “கே.கே.”, “ஐ.கே.” மற்றும் “ஆர்.சி.” போன்ற சுருக்கமான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவை, பினராயி விஜயன், ஐ.யு.எம்.எல். தலைவர் குன்ஹாலி குட்டி, காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா ஆகியோரின் சுருக்கங்களாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான், கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீணா விஜயன் நிறுவனம், சி.எம்.ஆர்.எல். நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்றது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு, 3 பேர் கொண்ட குழுவை மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் (எம்.சி.ஏ.) அமைத்திருக்கிறது.

இக்குழுவில், பெங்களூரு நிறுவனங்களின் துணைப் பதிவாளர் பி.எஸ்.வருண், சென்னை மண்டல இயக்குநர் அலுவலகத்தில் துணை இயக்குநராகப் பணிபுரியும் கே.எம்.சங்கர் நாராயண் மற்றும் புதுச்சேரி ஆர்.ஓ.சி. ஏ.கோகுல்நாத் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Tags: KeralaCM Pinarayi vijayanDaughter VeenaCompany ProbeCentral Govt Orders
Share
Tweet
SendShare
Previous Post

ஒடிசாவில் 2400 மெகாவாட் அனல் மின் திட்டம்!

Next Post

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தமிழக எம்பிக்கள் சந்திப்பு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies