நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
Jan 14, 2026, 08:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்து.

அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசனர். இதனால், அவையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர், இருவரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கூச்சலிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் பாலிகிராஃப் சோதனைக்கு ஜனவரி 5-ம் தேதி ஒப்புதல் அளித்தனர். நீலம் ஆசாத் மட்டும் மறுத்து விட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோர் நார்கோ பகுப்பாய்வு மற்றும் மூளை மேப்பிங் சோதனைக்கும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் பாலிகிராஃப் தேவை என்றும், கூடுதலாக மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங் தேவை என்றும் தெரிவித்தார்.

அதோடு, சட்ட உதவி ஆலோசகர் அமித் சுக்லா, குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் இருவரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங்குக்கான காரணத்தைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Parliamentsecurity breach
ShareTweetSendShare
Previous Post

அரிசி, கோதுமை ஏற்றுமதி… தடை நீக்கம் இல்லை: பியூஷ் கோயல்!

Next Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies