நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
Aug 20, 2025, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Jan 14, 2024, 03:19 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்து.

அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசனர். இதனால், அவையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர், இருவரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கூச்சலிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் பாலிகிராஃப் சோதனைக்கு ஜனவரி 5-ம் தேதி ஒப்புதல் அளித்தனர். நீலம் ஆசாத் மட்டும் மறுத்து விட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோர் நார்கோ பகுப்பாய்வு மற்றும் மூளை மேப்பிங் சோதனைக்கும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் பாலிகிராஃப் தேவை என்றும், கூடுதலாக மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங் தேவை என்றும் தெரிவித்தார்.

அதோடு, சட்ட உதவி ஆலோசகர் அமித் சுக்லா, குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் இருவரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங்குக்கான காரணத்தைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Parliamentsecurity breach
ShareTweetSendShare
Previous Post

அரிசி, கோதுமை ஏற்றுமதி… தடை நீக்கம் இல்லை: பியூஷ் கோயல்!

Next Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

சென்னை : திட்ட அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனைக்கு சீல்!

ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக வழங்கும் பக்தர்!

மதுரையில் தவெக மாநாடு – டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு வாபஸ்!

உக்ரைனின் புதிய Flamingo ஏவுகணை!

டெல்லி : 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் – போலீசார் தீவிர சோதனை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies