நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!
Aug 16, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல்: 6 பேருக்கும் 27-ம் தேதி வரை காவல் நீட்டிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 14, 2024, 03:19 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த சூழலில், கடந்த 13-ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அலுவல்கள் நடந்து கொண்டிருந்து.

அப்போது, பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த 2 பேர் எம்.பி.க்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்து, கலர் புகைக் குண்டுகளை வீசனர். இதனால், அவையில் பெரும் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர், இருவரும் டெல்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, நாடாளுமன்ற அலுவலகத்துக்கு வெளியே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் கூச்சலிட்டபடியே கலர் புகைக் குண்டுகளை வீசினர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

இதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்தது உட்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இவர்களுக்கு உடந்தையாக இருந்த மேலும் 2 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மனோரஞ்சன், சாகர் ஷர்மா, லலித் ஜா, அமோல் ஷிண்டே, மகேஷ் குமாவத் மற்றும் நீலம் ஆசாத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களின் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, மேற்கண்ட 6 பேரையும் டெல்லி போலீஸார் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது, விசாரணை நிலுவையில் இருக்கும் வரை குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் நீதிமன்றக் காவலில் வைக்கக் கோரி டெல்லி போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ஹர்தீப் கவுர், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஜனவரி 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது ஒருபுறம் இருக்க, குற்றம்சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் பாலிகிராஃப் சோதனைக்கு ஜனவரி 5-ம் தேதி ஒப்புதல் அளித்தனர். நீலம் ஆசாத் மட்டும் மறுத்து விட்டார்.

மேலும், குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோர் நார்கோ பகுப்பாய்வு மற்றும் மூளை மேப்பிங் சோதனைக்கும் ஒப்புதல் அளித்தனர்.

ஆனால், சிறப்பு அரசு வழக்கறிஞர் அகந்த் பிரதாப், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரின் பாலிகிராஃப் தேவை என்றும், கூடுதலாக மனோரஞ்சன் மற்றும் சாகர் ஆகியோரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங் தேவை என்றும் தெரிவித்தார்.

அதோடு, சட்ட உதவி ஆலோசகர் அமித் சுக்லா, குற்றம் சாட்டப்பட்ட மனோரஞ்சன் மற்றும் சாகர் இருவரின் நார்கோ மற்றும் மூளை மேப்பிங்குக்கான காரணத்தைக் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: Parliamentsecurity breach
Share
Tweet
SendShare
Previous Post

அரிசி, கோதுமை ஏற்றுமதி… தடை நீக்கம் இல்லை: பியூஷ் கோயல்!

Next Post

சென்னையில் போகி பண்டிகை கொண்டாட்டம்! – காற்று மாசு அதிகரிப்பு!

Related News

ஆவணி மாத பூஜை – சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!

தாய் , தாய் நாடு, தாய்மொழி மீது மிகுந்த அக்கறை கொண்டவன் – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies