கொச்சியில் ரூ. 4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் மோடி!
Jul 7, 2025, 02:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொச்சியில் ரூ. 4,000 கோடி மதிப்பிலான திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பாரத பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 17, 2024, 03:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கொச்சியில் லிவிங்ட்டன்னில், சுமார் 4000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கொச்சின் ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுது பார்க்கும் மையத்தைப் பாரத பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார்.

கேரளா மாநிலத்திற்கு இரண்டு நாள் பயணமாகப் பாரத பிரதமர் மோடி சென்றுள்ளார். அங்கு குருவாயூரில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

அதன் பின்னர், குருவாயூர் கோவிலில் நடந்த முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து கொச்சியின் வில்லிங்டன் தீவில் ரூ.4,000 கோடி மதிப்பிலான கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் சர்வதேச கப்பல் பழுதுபார்க்கும் மையம் மற்றும் புதிய கப்பல்துறையைப் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த திட்டத்தால், அடுத்த நான்கு ஆண்டுகளில் கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் அதன் விற்பனையை இரட்டிப்பாக்கி, அதன் மூலம் வருவாய் ரூ.7,000 கோடி வரை இருக்கும் என்று அம்மாநில அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

இந்த திறப்பு விழாவில் பேசிய பாரத பிரதமர் மோடி, “இன்று இந்தியா உலக வர்த்தகத்தின் மையமாக மாறும்போது, நாம் நமது கடல் சக்தியை அதிகரிக்கிறோம். இன்று நாட்டில் மிகப்பெரிய உலர் கப்பல்துறை இங்கு உள்ளது. இது தவிர, கப்பல் கட்டுதல், கப்பல் பழுதுபார்ப்பு, எல்பிஜி உள்கட்டமைப்புகள் மற்றும் இறக்குமதி முனையமும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய அம்சங்களால், கப்பல் கட்டும் தளத்தின் திறன் பன்மடங்கு உயரும். இந்த வசதிகளுக்காகக் கேரள மக்களை வாழ்த்துகிறேன்” என்றார்

Tags: PM ModiKerala
ShareTweetSendShare
Previous Post

லடாக்கின் சான்ஸ்கர் நதிக்கு சதர் மலையேற்றப் பயணத்தைத் தொடங்கிய ஐ.என்.எஸ் சிவாஜி கப்பல்!

Next Post

2,800 ஆண்டுகளுக்கு முன் குஜராத் வாட்நகரில் வாழ்ந்த மக்கள்!

Related News

அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தமான ஒன்று – டிரம்ப்

தமிழகத்தில் விடுதிகளின் பெயரை மாற்றுவதால் மட்டும் எதுவும் நடக்கப் போவதில்லை : எல்.முருகன்

மயிலாடுதுறை சிவன் கோயிலில் வெகு விமர்சையாக நடந்த கும்பாபிஷேகம்!

திருச்செந்தூர் : புனித நீர் தெளிக்கப்படுமென காத்திருந்த பக்தர்களுக்கு ஏமாற்றம்!

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்!

2008 ஆம் ஆண்டு தாக்குதல்களின் போது மும்பையில் இருந்ததாக தஹாவூர் ராணா ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவள்ளூர் : பைக் மீது லாரி மோதி விபத்து – உயிர் தப்பிய குடும்பத்தினர்!

பறந்து போ படத்தை பாராட்டிய இயக்குநர் அட்லீ!

சேலம் : ஷேர் மார்க்கெட் முதலீடு என கூறி மோசடி – பேராசிரியர் கைது!

நீலகிரி : வேட்டையாட துப்பாக்கியுடன் வந்த 5 பேர் கைது!

தெலுங்கு நடிகர்கள் விஜய்யிடம் கற்றுக்கொள்ள வேண்டும் – தில்ராஜூ

ஈரோடு : பைக்கை தாறுமாறாக ஓட்டிய இளைஞருக்கு அபராதம்!

லக்கி பாஸ்கர் 2ம் பாகத்தை உருவாக்க திட்டம் – வெங்கி அட்லூரி!

உள்நாட்டில் தயாரிக்கும் இந்தியா : இஸ்ரேலின் AIR LORA சூப்பர்சோனிக் ஏவுகணை!

கள்ளக்குறிச்சி : தண்ணீரில் தூசி இருந்ததாக குற்றச்சாட்டு!

வரும் 25-ம் தேதி வெளியாகும் மாரீசன் படம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies