விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!
Sep 19, 2025, 02:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் இன்று உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் முயற்சியாக இருந்தது. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மேல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்குவதன் மூலம் வறுமையை தோற்கடிக்க எங்களது அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.

மேலும், வளர்ச்சியின் நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும், சுயதொழில் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி.

இதில், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வட்டாரமும், ஒவ்வொரு குடும்பமும் சேர்க்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இந்த வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சிந்தனையின் விரிவாக்கம்தான் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா.

இதன் மூலம், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை தங்கள் வீட்டு வாசலில் பெறுகிறார்கள். மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவில் ஓடும் வளர்ச்சி ரதம், நம்பிக்கையின் ரதமாக மாறிவிட்டது. அதை தற்போது உத்திரவாதத்தின் ரதம் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில், இதன் மூலம் திட்டங்களின் பலன்களிலிருந்து யாரும் இழக்கப்பட மாட்டார்கள். யாரும் விடப்பட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. ஆகவே, இந்த யாத்திரையை ஜனவரி 26-ம் தேதியோடு முடித்து விடத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், இந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும். இந்த யாத்திரையின் மூலம் அனைத்து திட்டங்களையும் நிறைவு நிலைக்கு கொண்டு செல்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ஜன் அந்தோலனாக மாறி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 15 கோடி பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். அதோடு, இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா மூலம் 70 முதல் 80 சதவீத பஞ்சாயத்துகள் முழுமையான நிலையை எட்டி இருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiViksit Bharat Sankalp YatrabeneficiariesInteract
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களின் சிறப்பு!

Next Post

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Related News

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies