விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!
Aug 2, 2025, 02:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விக்சித் பாரத் சங்கல்ப யாத்திரை பிப்ரவரி வரை நீட்டிப்பு: பிரதமர் மோடி!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 04:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா பயனாளிகளுடன் இன்று உரையாடிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த 9 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டோருக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் முயற்சியாக இருந்தது. அந்த வகையில், கடந்த 9 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து வெளியே வந்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடி பேருக்கு மேல் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. வெளிப்படையான மற்றும் திறமையான நிர்வாகத்தை வழங்குவதன் மூலம் வறுமையை தோற்கடிக்க எங்களது அரசாங்கம் உறுதிபூண்டிருக்கிறது.

மேலும், வளர்ச்சியின் நீரோட்டத்தில் இருந்து விலகி இருக்கும் ஒவ்வொரு குடிமகனையும் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைவருக்கும் சத்தான உணவு, சுகாதாரம் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடு கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு வீட்டிற்கும் எரிவாயு இணைப்பு, தண்ணீர், மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகள் இருக்க வேண்டும். அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மேலும், சுயதொழில் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் என்பதுதான் எங்களது முயற்சி.

இதில், ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு வட்டாரமும், ஒவ்வொரு குடும்பமும் சேர்க்கப்பட வேண்டும். இதை உறுதி செய்வதே எங்களின் நோக்கம். இந்த வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான சிந்தனையின் விரிவாக்கம்தான் விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா.

இதன் மூலம், மக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் மத்திய அரசின் திட்டங்களின் பலன்களை தங்கள் வீட்டு வாசலில் பெறுகிறார்கள். மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ராவில் ஓடும் வளர்ச்சி ரதம், நம்பிக்கையின் ரதமாக மாறிவிட்டது. அதை தற்போது உத்திரவாதத்தின் ரதம் என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

ஏனெனில், இதன் மூலம் திட்டங்களின் பலன்களிலிருந்து யாரும் இழக்கப்பட மாட்டார்கள். யாரும் விடப்பட மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது. விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா தொடங்கி 2 மாதங்கள் நிறைவடைந்து விட்டது. ஆகவே, இந்த யாத்திரையை ஜனவரி 26-ம் தேதியோடு முடித்து விடத் திட்டமிட்டிருந்தோம்.

ஆனால், இந்த யாத்திரைக்கு நாடு முழுவதும் உள்ள மக்களின் அமோக ஆதரவு கிடைத்திருக்கிறது. எனவே, இந்த யாத்திரை பிப்ரவரி மாதம் வரை நீட்டிக்கப்படும். இந்த யாத்திரையின் மூலம் அனைத்து திட்டங்களையும் நிறைவு நிலைக்கு கொண்டு செல்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மேலும், விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா ஜன் அந்தோலனாக மாறி இருக்கிறது. இத்திட்டத்தின் மூலம் இதுவரை 15 கோடி பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். அதோடு, இந்த விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா மூலம் 70 முதல் 80 சதவீத பஞ்சாயத்துகள் முழுமையான நிலையை எட்டி இருக்கின்றன” என்று பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiViksit Bharat Sankalp YatrabeneficiariesInteract
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி ராமர் கோவிலுக்குப் பயன்படுத்தப்பட்ட கற்களின் சிறப்பு!

Next Post

ராமர் வழிபாடு என்று வரும்போது, பின் இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பெருமை கொள்வேன்! – உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

Related News

திருப்பத்தூர் : புதிய பேருந்து நிலையம் அமைக்க வணிகர்கள் எதிர்ப்பு!

குஜராத் சர்தார் சரோவர் அணையில் இருந்து மூன்றரை லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றம் – வெள்ள அபாய எச்சரிக்கை!

இராமநாதபுரம் : கடற்கரையில் மண் எடுப்பதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு!

போலீசார் தாக்கி மூதாட்டி உயிரிழந்த விவகாரம் : உடலை உடற்கூறு ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

எதிர்கால சந்ததியினரை காக்கவே இந்த நடைபயணம் : அன்புமணி

மதிமுகவில் துரை வைகோவிற்காக கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்படுகின்றனர் – மல்லை சத்யா குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

புரோ கபடி லீக் – அட்டவணை வெளியீடு!

தொழிலாளர்கள் நலனில் : அக்கறை மத்திய அரசின் அசத்தல் திட்டம்!

கன்னியாகுமரி : முன்னாள் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி வருகைக்கு எதிர்ப்பு!

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி நிதி முறைகேடு : மேலும் இரண்டு பேர் கைது!

முதல் டி20 போட்டி : பாகிஸ்தான் அணி வெற்றி!

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சரின் மகனை கைது செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

நீலகிரி : லாரி சாலையில் கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதி!

செங்கல்பட்டு : கட்டுமான பணி நடைபெறும் இடத்தில் இரும்பு பொருள் திருட்டு!

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் : தென்னாப்பிரிக்கா சாம்பியன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!

திருப்பூர் : வனச்சரக அலுவலகத்தில் விசாரணை கைதி தற்கொலை? : புகைப்படம் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies