ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!
Jan 14, 2026, 05:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 18, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், நேற்று கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, மார்ஷல் தீவு கொடி ஏற்றப்பட்ட எம்.வி.ஜென்கோ பிகார்டி என்கிற சரக்குக் கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு 11.11 மணியளவில் திடீரென அக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, உடனடியாக ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் ஏடன் வளைகுடா பகுதிக்கு அனுப்பப்பட்டது. அக்கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலுக்கு உதவி செய்திருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டாளர் பணியாளர் மற்றும் சேவைகள் துறையின் இந்திய கடற்படை துணை அட்மிரல் குர்சரண் சிங் கூறுகையில், “பாரசீக வளைகுடா, சோமாலியாவின் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கடற்படையின் போர்க்கப்பல்கள், கடற்கொள்ளையைத் தடுக்கும் மற்றும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும்.

இந்தியக் கடற்படையின் முக்கியப் பணிகளில் ஒன்று நமது கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதாகும். இதில் கடல்கள் வழியாகப் பயணிக்கும் நமது வர்த்தகத்தைப் பாதுகாப்பதும் அடங்கும். அந்த வகையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நமது ஆர்வத்தின் அடிப்படையில் நமது கப்பல்கள் தற்போது பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, செங்கடல் பகுதியில், சோமாலியா கடற்கரைக்கு அப்பால், ஏடன் வளைகுடாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக, கொல்கத்தா கிளாஸ் டிஸ்டிரயர்ஸ், பல போர் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் வீரர்களை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம்.

எங்கள் படைகளை அங்கு நிலைநிறுத்தி, எங்கள் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முதன்மையாக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரையிலான பகுதியில் கடல் கமாண்டோக்களுடன் கிட்டத்தட்ட 10 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Rescue Againindian navyDrone attackGulf of AdenCargo Vessel
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் : நாளை தொடக்கம்!

Next Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies