ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!
Jul 26, 2025, 06:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏடன் வளைகுடாவில் சரக்குக் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்: விரைந்து உதவிய இந்திய கடற்படை!

Web Desk by Web Desk
Jan 18, 2024, 07:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஏடன் வளைகுடாவில் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு உள்ளான மார்ஷல் தீவின் சரக்குக் கப்பலுக்கு, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் உதவி இருக்கிறது.

இதுகுறித்து இந்திய கடற்படை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம், நேற்று கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, மார்ஷல் தீவு கொடி ஏற்றப்பட்ட எம்.வி.ஜென்கோ பிகார்டி என்கிற சரக்குக் கப்பல் ஏடன் வளைகுடா பகுதியில் வந்து கொண்டிருந்தது.

நள்ளிரவு 11.11 மணியளவில் திடீரென அக்கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுகுறித்து இந்திய கடற்படைக்கு தகவல் கிடைக்கவே, உடனடியாக ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் போர்க்கப்பல் ஏடன் வளைகுடா பகுதிக்கு அனுப்பப்பட்டது. அக்கப்பல் ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பலுக்கு உதவி செய்திருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து இந்திய கடற்படையின் கட்டுப்பாட்டாளர் பணியாளர் மற்றும் சேவைகள் துறையின் இந்திய கடற்படை துணை அட்மிரல் குர்சரண் சிங் கூறுகையில், “பாரசீக வளைகுடா, சோமாலியாவின் கடற்கரை மற்றும் ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் கடற்படையின் போர்க்கப்பல்கள், கடற்கொள்ளையைத் தடுக்கும் மற்றும் வணிகக் கப்பல்களைப் பாதுகாக்கும்.

இந்தியக் கடற்படையின் முக்கியப் பணிகளில் ஒன்று நமது கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதாகும். இதில் கடல்கள் வழியாகப் பயணிக்கும் நமது வர்த்தகத்தைப் பாதுகாப்பதும் அடங்கும். அந்த வகையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் நமது ஆர்வத்தின் அடிப்படையில் நமது கப்பல்கள் தற்போது பாதுகாப்புப் பணியை மேற்கொண்டு வருகின்றன.

குறிப்பாக, செங்கடல் பகுதியில், சோமாலியா கடற்கரைக்கு அப்பால், ஏடன் வளைகுடாவில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் காரணமாக, கொல்கத்தா கிளாஸ் டிஸ்டிரயர்ஸ், பல போர் கப்பல்கள் மற்றும் பிற கப்பல்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான போர் வீரர்களை நாங்கள் நிறுத்தி இருக்கிறோம்.

எங்கள் படைகளை அங்கு நிலைநிறுத்தி, எங்கள் கப்பல் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், கடற்கொள்ளையர் எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் முதன்மையாக கவனம் செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறினார்.

வடக்கு மற்றும் மத்திய அரபிக்கடலில் இருந்து ஏடன் வளைகுடா வரையிலான பகுதியில் கடல் கமாண்டோக்களுடன் கிட்டத்தட்ட 10 போர்க்கப்பல்களை இந்திய கடற்படை நிறுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian navyDrone attackGulf of AdenCargo VesselRescue Again
ShareTweetSendShare
Previous Post

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் : நாளை தொடக்கம்!

Next Post

கர்நாடகாவில் ஸ்ரீராமர் பேனரை கிழித்த நபர் கைது!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies