விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!
Jul 26, 2025, 07:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகருக்கு வெளியே இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றது காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்தான் என்று முன்னாள் இந்திய விமானப் படை ஊழியரும், வழக்கின் முக்கிய நேரடி சாட்சியுமான உமேஷ்வர் அடையாளம் காட்டி இருக்கிறார்.

கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி, இந்திய விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக ஜம்மு காஷ்மீரின் ராவல்போரா பகுதியில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், விமானப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்தபோது, யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் (ஜே.கே.எல்.எஃப்.) என்ற தீவிரவாதக் குழுவின் தலைவராக இருந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், யாசின் மாலிக் உட்பட 6 பேர் மீதும் ஜம்மு தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும், 1994-ம் ஆண்டு யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, 1995-ம் ஆண்டு யாசின் மாலிக் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பிறகு, யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் ஒரு முக்கிய அரசியல் ஆர்வலராகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினர்.

எனினும், மீண்டும் யாசின் மாலிக் தீவிரவாதத்திற்கு மாறினார். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு யாசின் மாலிக்கின் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் பிறகு, தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ.) யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், யாசின் மாலிக் மீதான வழக்கு ஜம்மு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின்போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, புதுடெல்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, “சம்பவம் நடந்த தினத்தன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்” என்று உமேஷ்வர் அடையாளம் காட்டினார். யாசின் மாலிக் 1989-ம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Witness identifiedYasin Malik1990 attackAir Force OfficialsAttack Case
ShareTweetSendShare
Previous Post

ராமரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிலைகள்!

Next Post

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Related News

பெட்ரோலுடன் 20% எத்தனால் கலப்பு – முன்கூட்டியே இலக்கை எட்டிய இந்தியா!

பிரதமர் மோடி இன்று தூத்துக்குடி வருகை : பலத்த பாதுகாப்பு!

மடப்புரம் அஜித் குமார் லாக்கப் கொலை : சிபிஐ அதிகாரிகள் இரு குழுக்களாகப் பிரிந்து விசாரணை!

பிரதமர் மோடியை ஆரத்தழுவி வரவேற்ற மாலத்தீவு அதிபர் முய்சு!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை : கைது செய்யப்பட்ட அசாமை சேர்ந்த நபரிடம் விசாரணை!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More

அண்மைச் செய்திகள்

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies