விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!
Jun 15, 2026, 05:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 1990-ம் ஆண்டு ஸ்ரீநகருக்கு வெளியே இந்திய விமானப்படை வீரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றது காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் யாசின் மாலிக்தான் என்று முன்னாள் இந்திய விமானப் படை ஊழியரும், வழக்கின் முக்கிய நேரடி சாட்சியுமான உமேஷ்வர் அடையாளம் காட்டி இருக்கிறார்.

கடந்த 1990-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி, இந்திய விமானப் படை வீரர்கள் ஸ்ரீநகர் விமான நிலைய பணிக்கு செல்வதற்காக ஜம்மு காஷ்மீரின் ராவல்போரா பகுதியில் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த தீவிரவாதிகள், விமானப்படை வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இத்தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

இச்சம்பவம் நடந்தபோது, யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத இயக்கத்தின் (ஜே.கே.எல்.எஃப்.) என்ற தீவிரவாதக் குழுவின் தலைவராக இருந்தார். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், யாசின் மாலிக் உட்பட 6 பேர் மீதும் ஜம்மு தடா நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

ஆனாலும், 1994-ம் ஆண்டு யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து, 1995-ம் ஆண்டு யாசின் மாலிக் மீதான விசாரணைக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இதன் பிறகு, யாசின் மாலிக் விடுவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, யாசின் மாலிக் ஒரு முக்கிய அரசியல் ஆர்வலராகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினர்.

எனினும், மீண்டும் யாசின் மாலிக் தீவிரவாதத்திற்கு மாறினார். இந்த சூழலில், கடந்த ஏப்ரல் 2019-ம் ஆண்டு யாசின் மாலிக்கின் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இதன் பிறகு, தீவிரவாத இயக்கத்துக்கு நிதி திரட்டிக் கொடுத்தது தொடர்பான வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பால் (என்.ஐ.ஏ.) யாசின் மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், யாசின் மாலிக் மீதான வழக்கு ஜம்மு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சம்பவத்தின்போது உடனிருந்த முன்னாள் விமானப் படை வீரர் ராஜ்வர் உமேஷ்வர் சிங் நேரில் ஆஜரானார். அப்போது, புதுடெல்லியில் திஹார் சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளியான யாசின் மாலிக் வீடியோ வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, “சம்பவம் நடந்த தினத்தன்று தான் அணிந்திருந்த அங்கியில் இருந்து துப்பாக்கியை எடுத்து வீரர்களை நோக்கி யாசின் மாலிக் சரமாரியாக சுட்டார்” என்று உமேஷ்வர் அடையாளம் காட்டினார். யாசின் மாலிக் 1989-ம் ஆண்டு அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சயீதின் மகள் ரூபையா சயீத் கடத்தப்பட்ட வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Witness identifiedYasin Malik1990 attackAir Force OfficialsAttack Case
ShareTweetSendShare
Previous Post

ராமரின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் சிலைகள்!

Next Post

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies