மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!
Sep 14, 2026, 05:10 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 02:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடக்கத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த மின்சார வாகன கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உலகின் நம்பர் 1 மின்சார வாகன தயாரிப்பாளராக மாறுவதற்கு தேவையான அனைத்து திறன்களையும் இந்தியா கொண்டிருக்கிறது.

இதுவரை 34.54 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டிருக்கிறது.

எனவே, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன விற்பனை தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபோல, தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு 60 கி.மீ. சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2013-14-ல் 91,000 கி.மீ.யாக இருந்த நாட்டின் மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் கடந்த 10 ஆண்டுகளில் 1.45 லட்சம் கி.மீட்டராக உயர்ந்திருக்கிறது” என்றார்.

Tags: Nitin GadkariElectric VehiclesProductionIncreases
Share
Tweet
SendShare
Previous Post

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Next Post

U -19 உலகக்கோப்பை : முதல் போட்டி – அமெரிக்கா பேட்டிங்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies