மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!
Jul 31, 2026, 01:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 19, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடக்கத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த மின்சார வாகன கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உலகின் நம்பர் 1 மின்சார வாகன தயாரிப்பாளராக மாறுவதற்கு தேவையான அனைத்து திறன்களையும் இந்தியா கொண்டிருக்கிறது.

இதுவரை 34.54 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டிருக்கிறது.

எனவே, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன விற்பனை தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபோல, தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு 60 கி.மீ. சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2013-14-ல் 91,000 கி.மீ.யாக இருந்த நாட்டின் மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் கடந்த 10 ஆண்டுகளில் 1.45 லட்சம் கி.மீட்டராக உயர்ந்திருக்கிறது” என்றார்.

Tags: Nitin GadkariElectric VehiclesProductionIncreases
ShareTweetSendShare
Previous Post

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Next Post

U -19 உலகக்கோப்பை : முதல் போட்டி – அமெரிக்கா பேட்டிங்!

Related News

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் கல்லூரி தாளாளர் கைது

மேகதாது அணை தீர்மானத்தை எதித்த வழக்கு; தலைமைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies