மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!
Oct 26, 2025, 02:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன விற்பனையில் இந்தியா 300% வளர்ச்சி: நிதின் கட்கரி!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை தொடக்கத்தில் இருந்து 300 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவைப் பொறுத்தவரை, நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க பசுமை ஆற்றல் உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் தன்னிறைவு அடைவதற்கான முயற்சிகளை மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது.

கடந்த மாதம் 24-ம் தேதி நடந்த மின்சார வாகன கண்காட்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “உலகின் நம்பர் 1 மின்சார வாகன தயாரிப்பாளராக மாறுவதற்கு தேவையான அனைத்து திறன்களையும் இந்தியா கொண்டிருக்கிறது.

இதுவரை 34.54 லட்சம் மின்சார வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 கோடி மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், இதன் மூலம் 5 கோடி வேலைவாய்ப்புகளும் உருவாகும்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மின்சார வாகன உற்பத்தி தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, “பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத்தின்படி நாட்டில் மாசுபாட்டைக் குறைக்க இந்தியா உறுதி பூண்டிருக்கிறது.

எனவே, நாட்டில் மின்சார வாகன உற்பத்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப, இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனையும் அதிகரித்து வருகிறது. மின்சார வாகன விற்பனை தொடக்கத்தில் இருந்ததைவிட தற்போது 300 சதவீதம் அதிகரித்திருக்கிறது.

அதேபோல, தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 2024-25 நிதியாண்டில் நாளொன்றுக்கு 60 கி.மீ. சாலைகள் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 2013-14-ல் 91,000 கி.மீ.யாக இருந்த நாட்டின் மொத்த நெடுஞ்சாலைகளின் நீளம் கடந்த 10 ஆண்டுகளில் 1.45 லட்சம் கி.மீட்டராக உயர்ந்திருக்கிறது” என்றார்.

Tags: Nitin GadkariElectric VehiclesProductionIncreases
ShareTweetSendShare
Previous Post

விமானப்படை வீரர்களை சுட்டது இவர்தான்: யாசின் மாலிக்கை அடையாளம் காட்டிய சாட்சி!

Next Post

U -19 உலகக்கோப்பை : முதல் போட்டி – அமெரிக்கா பேட்டிங்!

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies