2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன்!
Jan 14, 2026, 09:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன்!

Murugesan M by Murugesan M
Jan 19, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் 2 லட்சம் மருத்துவ முகாம்களில் மொத்தம் 5 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.

தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணத்தில் (விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரா), கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்பட்ட 1,99,199 சுகாதார முகாம்களில் இதுவரை ஒட்டுமொத்தமாக 5,19,35,933 பேர் பங்கேற்றுப் பயன் அடைந்துள்ளனர்.

மருத்துவ முகாம்களில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள்:

ஆயுஷ்மான் பாரத் – பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம்: இந்த யாத்திரையில் ஆயுஷ்மான் அட்டைகள் ஆயுஷ்மான் செயலியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டு, பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன. இதுவரை 48,96,774 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

காசநோய் பரிசோதனை: காசநோய்க்கான அறிகுறிகளை பரிசோதித்தல், சளி பரிசோதனை போன்றவையும் மேற்கொள்ளப்படுகிறது. காசநோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நோயாளிகள் உயர் சிகிச்சைகளுக்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். 65வது நாள் வரை, 2,62,05,700  பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 9,93,800 நபர்கள் உயர் பொது சுகாதார நிலையங்களுக்கு சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தின் கீழ், உதவிக்கான வழிகளும் ஏற்படுத்தித் தரப்படுகிறது.  காசநோய் நோயாளிகளுக்கு நேரடி பணப் பரிமாற்றம் மூலம் பண உதவி வழங்கப்படுகிறது. இதற்காக நிலுவையில் உள்ள பயனாளிகளின் வங்கிக் கணக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்படுகின்றன. இதுவரை 69,300 பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அரிவாள் செல் ரத்த சோகை நோய்: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில், அரிவாள் செல் ரத்த சோகை நோயை கண்டறிய சோதனைகள் செய்யப்படுகிறது. நோய் உள்ளவர்கள் உயர் மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதுவரை 31,34,600 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 60,900 நபர்களுக்கு நோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு உயர் பொது சுகாதார நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

தொற்றா நோய்கள்: உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டு, நோய் அறிகுறி இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மேல் சிகிச்சை மையங்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதுவரை 4,25,76,600 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்க்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 16,44,900 நபர்களுக்கு உயர் இரத்த அழுத்த நோய் உள்ளதாகவும், 11,74,700 பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாகவும் சந்தேகிக்கப்பட்டு, 25,50,700 நபர்கள் உயர் பொது மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

பின்னணி:

நாடு முழுவதும் மத்திய அரசின் திட்டங்களின் பலன்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, 2023 நவம்பர் 15-ம் தேதி ஜார்க்கண்டின் குந்தியில் இருந்து பிரதமரால் இந்த வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான லட்சியப் பயணம் தொடங்கப்பட்டது. இந்தப் பயணத்தில் தகவல், கல்வி மற்றும் மக்கள் தொடர்பு வாகனம் செல்லும் இடங்களில் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

Tags: central goverment
ShareTweetSendShare
Previous Post

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை!

Next Post

U -19 உலகக்கோப்பை : அமெரிக்கா மோசமான பேட்டிங்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies