என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!
Aug 18, 2025, 12:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார்.

டெல்லி கான்ட்டில் என்.சி.சி. குடியரசு தின முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்துகொண்டு என்.சி.சி. அமைப்பினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “என்.சி.சி. என்பது ஒரு வெறும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை மிகவும் பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும் இயக்கம்.

மேலும், என்.சி.சி. பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தின் மூலம், நாட்டின் துடிப்பான பிம்பத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்கிற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வகையில், என்.சி.சி. புதிதாக உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

புனித் சாகர் அபியான், கங்கா உத்சவ் பிரச்சாரம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சாரம் உள்ளிட்ட சமூக சேவைத் திட்டங்களை நோக்கிய என்.சி.சி.யின் சேவை பாராட்டத்தக்கது. இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்” என்றார்.

 

நிகழ்வின் ஒரு பகுதியாக, என்.சி.சி.யின் ஸ்மார்ட் கேடட்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜய் பட் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கபுர்தலா சைனிக் பள்ளியின் என்.சி.சி. கேடட்கள் சிறப்பான பேண்ட் இசையை நடத்தினர்.

பின்னர், பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் கொடி பகுதிக்கு அஜய் பட் விஜயம் செய்தார். அப்போது, மாநில இயக்குனரகங்கள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது. பிறகு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

Tags: addressesRaksha Rajya MantriAjay BhattNCC Republic Day Camp
ShareTweetSendShare
Previous Post

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies