என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!
Oct 2, 2025, 09:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார்.

டெல்லி கான்ட்டில் என்.சி.சி. குடியரசு தின முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்துகொண்டு என்.சி.சி. அமைப்பினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “என்.சி.சி. என்பது ஒரு வெறும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை மிகவும் பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும் இயக்கம்.

மேலும், என்.சி.சி. பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தின் மூலம், நாட்டின் துடிப்பான பிம்பத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்கிற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வகையில், என்.சி.சி. புதிதாக உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

புனித் சாகர் அபியான், கங்கா உத்சவ் பிரச்சாரம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சாரம் உள்ளிட்ட சமூக சேவைத் திட்டங்களை நோக்கிய என்.சி.சி.யின் சேவை பாராட்டத்தக்கது. இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்” என்றார்.

 

நிகழ்வின் ஒரு பகுதியாக, என்.சி.சி.யின் ஸ்மார்ட் கேடட்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜய் பட் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கபுர்தலா சைனிக் பள்ளியின் என்.சி.சி. கேடட்கள் சிறப்பான பேண்ட் இசையை நடத்தினர்.

பின்னர், பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் கொடி பகுதிக்கு அஜய் பட் விஜயம் செய்தார். அப்போது, மாநில இயக்குனரகங்கள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது. பிறகு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

Tags: addressesRaksha Rajya MantriAjay BhattNCC Republic Day Camp
ShareTweetSendShare
Previous Post

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

Related News

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

சவால்களுக்கே சவால் விடும் “டெத் டிராப்” – மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கில்லாடி “மிஸ்டர் பீஸ்ட்”!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

இணையத்தை கலக்கும் இளம் பஞ்சாப் பாடகி : 6 நாட்களில் 30 லட்சம் பார்வைகளை கடந்த “That Girl” பாடல்!

பக்ராமை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா : இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

ஆர்எஸ்எஸ் என்பது தேசிய உணர்வின் நல்லொழுக்க அவதாரம் : பிரதமர் மோடி

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies