என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!
Jul 29, 2026, 02:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை, ஒழுக்கம்: பாதுகாப்புத்துறை இணை அமைச்சர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

என்.சி.சி. என்றாலே ஒற்றுமை மற்றும் ஒழுக்கம்தான். நாட்டின் இளைஞர்களை பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும இயக்கம் என்று பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கூறியிருக்கிறார்.

டெல்லி கான்ட்டில் என்.சி.சி. குடியரசு தின முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் அஜய் பட் கலந்துகொண்டு என்.சி.சி. அமைப்பினர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “என்.சி.சி. என்பது ஒரு வெறும் அமைப்பு மட்டுமல்ல. இளைஞர்களை மிகவும் பொறுப்பான மற்றும் தேசபக்தியுள்ள குடிமக்களாக மாற்றும் இயக்கம்.

மேலும், என்.சி.சி. பல்வேறு கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தின் மூலம், நாட்டின் துடிப்பான பிம்பத்தையும், வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடையாளத்தையும் பிரதிபலிக்கிறது. ஒற்றுமை மற்றும் ஒழுக்கம் என்கிற பொன்மொழியை மெய்ப்பிக்கும் வகையில், என்.சி.சி. புதிதாக உலகின் மிகப்பெரிய சீருடை அணிந்த இளைஞர் அமைப்பாக வளர்ந்திருக்கிறது.

புனித் சாகர் அபியான், கங்கா உத்சவ் பிரச்சாரம், ஸ்வச் பாரத் அபியான் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சாரம் உள்ளிட்ட சமூக சேவைத் திட்டங்களை நோக்கிய என்.சி.சி.யின் சேவை பாராட்டத்தக்கது. இந்த குடியரசு தினத்தில் அரசியலமைப்பின் இலட்சியங்களுக்கு நம்மை அர்ப்பணித்து, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வலிமையான இந்தியாவை உருவாக்க பாடுபட வேண்டும்” என்றார்.

 

நிகழ்வின் ஒரு பகுதியாக, என்.சி.சி.யின் ஸ்மார்ட் கேடட்கள் வழங்கிய அணிவகுப்பு மரியாதையை, பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜய் பட் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, கபுர்தலா சைனிக் பள்ளியின் என்.சி.சி. கேடட்கள் சிறப்பான பேண்ட் இசையை நடத்தினர்.

பின்னர், பல்வேறு சமூக விழிப்புணர்வு கருப்பொருள்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை சித்தரிக்கும் கொடி பகுதிக்கு அஜய் பட் விஜயம் செய்தார். அப்போது, மாநில இயக்குனரகங்கள் பற்றி அவருக்கு விளக்கப்பட்டது. பிறகு, தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலாச்சார நிகழ்ச்சியையும் பார்வையிட்டார்.

Tags: addressesRaksha Rajya MantriAjay BhattNCC Republic Day Camp
ShareTweetSendShare
Previous Post

மெஹ்தி மஸ்ரூர் பிஸ்வாஸ் குற்றவாளி: என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

Next Post

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மேற்கத்திய இசை வடிவில் பாடுவதா? அண்ணாமலை கண்டனம்!

Related News

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies