அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Sep 9, 2025, 07:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அதோடு, பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியும் வருகிறார். அந்த வகையில், முதல்வர் யோகி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இராம் லல்லா குழந்தை சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகிறார்கள்.

மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் புனிதர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, விரிவான மற்றும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விழாவில் பங்கேற்க வரும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு வி.வி.ஐ.பி.யுடனும் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பிரான் பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகும் , அதாவது ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். ஆகவே, அடுத்த 6 மாதங்களுக்கு நிலைமையை மதிப்பீடு செய்து, ஒரு விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

அதேபோல, ஜனவரி 22 கொண்டாட்டம் மற்றும் அதற்குப் பிறகு வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். வழித்தடத்தை மாற்றுவது பற்றி விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்களுடன் அயோத்தியை இணைக்கும் முக்கியச் சாலைகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருக்க வேண்டும்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்துக்கு போதுமான அளவில் மின்சாரப் பேருந்துகள் இருப்பு இருக்க வேண்டும். மேலும், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, அயோத்தியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அயோத்தி கோவிலில் ஸ்ரீராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸார் மோப்ப நாய் படையுடன் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags: Ram TempleAyodyaRailway StationPran Pratishtha ceremonysecurity heightenedghaziabad
ShareTweetSendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா vs வங்கதேசம்!

Next Post

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

Related News

பொருளாதார நடவடிக்கை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரிக்ஸ் மாநாட்டில் ஜெய்சங்கர் வலியுறுத்தல்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், ஹிமாச்சலப்பிரதேசம் – பிரதமர் மோடி இன்று ஆய்வு!

ஜிஎஸ்டி வரி சீர் திருத்தம் – உணவு பொருட்களின் வரி விதிப்பு மாற்றங்கள் குறித்த பட்டியல்!

சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து – நேபாள அரசு அறிவிப்பு!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறந்த குடியரசு துணைத் தலைவராக செயல்படுவார் – பிரதமர் மோடி

குடியரசு துணை தலைவர் தேர்தல் – இன்று வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

பதவி விலகினார் ஜப்பான் பிரதமர் : இஷிபாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன?

உதவிக்கரம் நீட்டிய இந்திய ராணுவம்

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

பேஸ்புக், யூடியூப்பிற்கு தடை : போர்க்கோலம் பூண்ட GEN-Z இளைஞர்கள் – கலவர பூமியான நேபாளம் பற்றி எரியும் காத்மாண்டு!

அவமானப்படுத்திய FORD அலறவிட்ட ரத்தன் டாடா : உதாசீனங்களை உரமாக்கி சாதனை!

யாரும் நெருங்க முடியாதாம் : அமெரிக்காவின் 6-ம் தலைமுறை போர் விமானம்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

15 ஆண்டுகளாக செயின் திருடி வணிக வளாகம் கட்டிய திமுக பஞ். தலைவி : போலீசாரிடம் வாக்குமூலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies