அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Mar 15, 2026, 03:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அதோடு, பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியும் வருகிறார். அந்த வகையில், முதல்வர் யோகி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இராம் லல்லா குழந்தை சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகிறார்கள்.

மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் புனிதர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, விரிவான மற்றும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விழாவில் பங்கேற்க வரும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு வி.வி.ஐ.பி.யுடனும் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பிரான் பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகும் , அதாவது ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். ஆகவே, அடுத்த 6 மாதங்களுக்கு நிலைமையை மதிப்பீடு செய்து, ஒரு விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

அதேபோல, ஜனவரி 22 கொண்டாட்டம் மற்றும் அதற்குப் பிறகு வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். வழித்தடத்தை மாற்றுவது பற்றி விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்களுடன் அயோத்தியை இணைக்கும் முக்கியச் சாலைகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருக்க வேண்டும்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்துக்கு போதுமான அளவில் மின்சாரப் பேருந்துகள் இருப்பு இருக்க வேண்டும். மேலும், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, அயோத்தியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அயோத்தி கோவிலில் ஸ்ரீராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸார் மோப்ப நாய் படையுடன் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags: Ram TempleAyodyaRailway StationPran Pratishtha ceremonysecurity heightenedghaziabad
ShareTweetSendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா vs வங்கதேசம்!

Next Post

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies