அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!
Jun 15, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி பிரான் பிரதிஷ்டை: காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 12:08 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தியில் இராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் 10,000 பேருக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ஆகவே, வி.வி.ஐ.பி.க்களின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அதோடு, பாதுகாப்பு தொடர்பாக அவ்வப்போது தனது எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியும் வருகிறார். அந்த வகையில், முதல்வர் யோகி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், “மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இராம் லல்லா குழந்தை சிலையின் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இவ்விழாவுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து விருந்தினர்கள் வருகிறார்கள்.

மேலும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் புனிதர்கள், மதத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்கிறார்கள். ஆகவே, விரிவான மற்றும் பலமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். விழாவில் பங்கேற்க வரும் முக்கியப் பிரமுகர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதைக்காக, ஒவ்வொரு வி.வி.ஐ.பி.யுடனும் ஒரு தொடர்பு அதிகாரி நியமிக்கப்பட வேண்டும்.

பிரான் பிரதிஷ்டை நிறைவடைந்த பிறகும் , அதாவது ஜனவரி 22-ம் தேதிக்குப் பிறகும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். ஆகவே, அடுத்த 6 மாதங்களுக்கு நிலைமையை மதிப்பீடு செய்து, ஒரு விரிவான செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்.

அதேபோல, ஜனவரி 22 கொண்டாட்டம் மற்றும் அதற்குப் பிறகு வாகன நிறுத்தம் மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்கு சிறந்த திட்டத்தை உருவாக்க வேண்டும். வழித்தடத்தை மாற்றுவது பற்றி விரிவான விளம்பரம் செய்யப்பட வேண்டும். பல்வேறு மாவட்டங்களுடன் அயோத்தியை இணைக்கும் முக்கியச் சாலைகளில் போதுமான வாகன நிறுத்துமிடங்கள் இருக்க வேண்டும்.

மேலும், பக்தர்களின் போக்குவரத்துக்கு போதுமான அளவில் மின்சாரப் பேருந்துகள் இருப்பு இருக்க வேண்டும். மேலும், பக்தர்கள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்கு போதுமான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, அயோத்தியில் செய்யப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு செய்தார்.

இந்த நிலையில், அயோத்தி கோவிலில் ஸ்ரீராம் லல்லாவின் ‘பிரான் பிரதிஷ்டை’ விழா மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது. மாநில போலீஸார் மோப்ப நாய் படையுடன் இரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags: Ram TempleAyodyaRailway StationPran Pratishtha ceremonysecurity heightenedghaziabad
ShareTweetSendShare
Previous Post

U -19 உலகக்கோப்பை : இந்தியா vs வங்கதேசம்!

Next Post

அடுத்த 20 ஆண்டுகளில் 3000 விமானங்கள், 41,000 விமானிகள்!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies