அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!
Jan 14, 2026, 03:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின்போது இறந்த கரசேவகர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள சுமார் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்…

அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர்களில், நாட்டிலுள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயின், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஆதீன கர்த்தர்கள், மடாலய அதிபதிகள், சங்கராச்சாரியார்கள் ஆகியோர் அடக்கம்.

அதேபோல, அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, இறந்த கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள், ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்து துறவிகள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நபர்கள், நோபல் பரிசு, பாரத ரத்னா, பரம்வீர் சக்ரா, பத்ம விருதுகள் ஆகியோரும் அழைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், இராணுவ முப்படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள், முன்னாள் தூதுவர்கள், நிர்வாக அதிகாரிகள், புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களில் இருந்து மொத்தம் 55 பேர், கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Ram TempleAyodyaPran PratisthaChief Guests
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளராக பிரசாத் நியமனம்!- அண்ணாமலை அறிவிப்பு

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies