அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!
Jul 24, 2025, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!

Web Desk by Web Desk
Jan 20, 2024, 07:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின்போது இறந்த கரசேவகர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள சுமார் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்…

அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர்களில், நாட்டிலுள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயின், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஆதீன கர்த்தர்கள், மடாலய அதிபதிகள், சங்கராச்சாரியார்கள் ஆகியோர் அடக்கம்.

அதேபோல, அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, இறந்த கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள், ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்து துறவிகள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நபர்கள், நோபல் பரிசு, பாரத ரத்னா, பரம்வீர் சக்ரா, பத்ம விருதுகள் ஆகியோரும் அழைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், இராணுவ முப்படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள், முன்னாள் தூதுவர்கள், நிர்வாக அதிகாரிகள், புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களில் இருந்து மொத்தம் 55 பேர், கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Ram TempleAyodyaPran PratisthaChief Guests
ShareTweetSendShare
Previous Post

தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளராக பிரசாத் நியமனம்!- அண்ணாமலை அறிவிப்பு

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies