அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!
Sep 14, 2026, 08:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம்: யார் யாருக்கு அழைப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 20, 2024, 07:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை விழாவுக்கு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள், குடிமை விருது பெற்றவர்கள், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் மற்றும் ராம் மந்திர் இயக்கத்தின்போது இறந்த கரசேவகர்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில், 1,800 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா வரும் 22-ம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பிரான் பிரதிஷ்டை செய்கிறார்.

இவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு நாட்டிலுள்ள சுமார் 10,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, இந்நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் விருந்தினர்கள் யார் யார் என்பது குறித்து பார்க்கலாம்…

அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய நபர்களில், நாட்டிலுள்ள பிரபல தொழிலதிபர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள், ஜெயின், பௌத்தம், சீக்கியம் உள்ளிட்ட மதத் தலைவர்கள், ஆதீன கர்த்தர்கள், மடாலய அதிபதிகள், சங்கராச்சாரியார்கள் ஆகியோர் அடக்கம்.

அதேபோல, அயோத்தி இராம ஜென்ம பூமி வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், வாதாடிய வழக்கறிஞர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, இறந்த கர சேவகர்களின் குடும்ப உறுப்பினர்கள், ராம் மந்திர் இயக்கத்தின் தலைவர்களின் குடும்ப உறுப்பினர்கள், இந்து துறவிகள், பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள், செய்தித்தாள்கள், தொலைக்காட்சி சேனல்களின் முக்கிய நபர்கள், நோபல் பரிசு, பாரத ரத்னா, பரம்வீர் சக்ரா, பத்ம விருதுகள் ஆகியோரும் அழைப்புப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மேலும், உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள், இராணுவ முப்படைகளின் ஓய்வு பெற்ற தலைவர்கள், முன்னாள் தூதுவர்கள், நிர்வாக அதிகாரிகள், புத்திஜீவிகள், விளையாட்டு வீரர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோரும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதேபோல, நாட்டின் உலகளாவிய நிலையை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் புலம்பெயர்ந்த இந்தியர்களில் இருந்து மொத்தம் 55 பேர், கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: Ram TempleAyodyaPran PratisthaChief Guests
Share
Tweet
SendShare
Previous Post

தமிழக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளராக பிரசாத் நியமனம்!- அண்ணாமலை அறிவிப்பு

Next Post

ராமர் கோவில் கும்பாபிஷேகம் : விடுமுறை அறிவித்தது ரிலையன்ஸ் நிறுவனம்!

Related News

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

Load More

அண்மைச் செய்திகள்

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies