இந்தியா - மியான்மர் எல்லையில் கம்பி வேலி: அமித்ஷா தகவல்!
Jan 14, 2026, 06:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – மியான்மர் எல்லையில் கம்பி வேலி: அமித்ஷா தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 11:14 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – வங்கதேச எல்லையைப் போல், இந்தியா – மியான்மர் எல்லையிலும் கம்பி வேலி அமைக்கப்படும். இதன் மூலம் இரு நாட்டு எல்லை வழியாக மக்கள் சுதந்திரமாக செல்லத் தடை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

அண்டை நாடான மியான்மரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், இராணுவத்துக்கும் ஆயுதக் குழுக்களும் இடையே உள்நாட்டுப் போர் வெடித்திருக்கிறது. தற்போது போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டு இராணுவ வீரர்கள் மிசோராம் மாநிலத்தில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.

மேலும், இராணுவ வீரர்கள் தங்கி இருந்த முகாமை ஆயுதக்குழு கைப்பற்றி இருக்கிறது. எனவே, அம்முகாமில் இருந்த 600 இராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தின் லாங்ட்லாய் மாவட்டத்தில் அடைக்கலம் புகுந்தனர். இவர்கள் அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதோடு, மியான்மர் இராணுவத்தினர் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சில ஆயுதக் குழுக்களும் எல்லை தாண்டி வந்து மிசோராம் மாநிலத்தில் தஞ்சமடைகின்றனர். இவர்களை மியான்மர் இராணுவ வீரர்கள் மிசோராம் மாநிலத்துக்குள் புகுந்து வேட்டையாடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, மிசோராம் மாநிலத்தில் நிலவும் சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன், முதல்வர் லால்து ஹோமா ஆலோசனை நடத்தினார். இந்த சூழலில்தான், இந்தியா – மியான்மர் எல்லையில் கம்பி வேலி அமைக்கப்படும் என்று அமித்ஷா கூறியிருக்கிறார்.

அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் அஸ்ஸாம் காவல்துறை கமாண்டோக்களின் “பாசிங் அவுட்” அணிவகுப்பு நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசுகையில், “இந்தியா – மியான்மர் எல்லையில் வேலி அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். இதன் மூலம் இந்தியா – மியான்மர் எல்லையில் மக்கள் சுதந்திரமாக நடமாடுவது கட்டுப்படுத்தப்படும்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் நாட்டில் சட்டம் ஒழுங்கு கணிசமாக மேம்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் கீழ் உள்நாட்டுப் பாதுகாப்பு வெகுவாக மேம்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது இது மிகவும் சிக்கலாக இருந்தது. அஸ்ஸாமில் ஏறக்குறைய அனைத்து கிளர்ச்சிக் குழுக்களும் ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டன.

இராமர் கோவில் கும்பாபிஷேகம் அனைத்து நாட்டு மக்களுக்கும் பெருமை சேர்க்கும் விஷயம். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் கனவிற்கு இது தொடக்கமாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட கிளர்ச்சியால் குடும்ப உறுப்பினர்களை இழந்த அஸ்ஸாம் மக்கள் ராகுல் காந்தியின் நியாய யாத்திரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.

Tags: Amit ShahHome ministerIndo-Myanmar bordeFencingstart soon
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Next Post

ஷீகான் ஹூசைனிக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies