மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் திட்டம்: புனேயில் தொடக்கம்!
Jul 24, 2025, 06:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் திட்டம்: புனேயில் தொடக்கம்!

Web Desk by Web Desk
Jan 21, 2024, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடித் திட்டத்தை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புனேயில் தொடங்கி வைத்தார்.

ஆல்கஹாலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடி தொழில்நுட்பத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் புனே அருகே உள்ள பிரன்குட் தொழிற்பேட்டையில் உள்ள பிரஜ் உத்யோக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிரஜ் தலைவர் பிரமோத் சௌத்ரி, இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இத்திட்டம் நிலையான உயிரியல் விமான எரிபொருள் அல்லது நிலையான விமான எரிபொருளை உற்பத்தி செய்யும். இந்த பயோ ஏவியேஷன் எரிபொருளுக்கு உலகச் சந்தையில் அதிக கிராக்கி இருக்கிறது. இதற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது.

உயிரி எரிபொருளுக்காக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவிடம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. பிரேசிலுக்கு முன் இந்தியாவில் இத்திட்டத்தை அமைத்ததற்காக பிரஜ் உத்யோக் குழுமத்தின் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இத்திட்டம் உண்மையிலேயே உலகிற்கு முன்னோடியாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திறப்பு விழா முடிந்ததும், அமைச்சர் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் திருப்தி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ ஏவியேஷன் எரிபொருளைப் பயன்படுத்தி புனேயில் இருந்து டெல்லிக்கு விமானம் இயக்கப்பட்டது. அப்போது, ​​அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் பூரி வரவேற்றார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த விமான எரிபொருளில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தையாவது இந்த நிலையான பயோ ஏவியேஷன் எரிபொருளுடன் கலந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14 கோடி லிட்டர் உயிரி எரிபொருள் தேவைப்படும். ஆகவே, எதிர்காலத்தில் இந்த உயிரி எரிபொருள் உற்பத்தித் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: puneHardeep Singh PuriUnion Ministeralcoholjet fuelfirst pilot projectLaunches
ShareTweetSendShare
Previous Post

மேகாலயா மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

அகமதாபாத் விமான நிலையம் – சுமார் 49 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

Load More

அண்மைச் செய்திகள்

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies