மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் திட்டம்: புனேயில் தொடக்கம்!
Sep 5, 2026, 06:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் திட்டம்: புனேயில் தொடக்கம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 21, 2024, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுபானத்தில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடித் திட்டத்தை, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி புனேயில் தொடங்கி வைத்தார்.

ஆல்கஹாலில் இருந்து விமான எரிபொருள் தயாரிக்கும் முதல் முன்னோடி தொழில்நுட்பத் திட்டம் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டம் புனே அருகே உள்ள பிரன்குட் தொழிற்பேட்டையில் உள்ள பிரஜ் உத்யோக் குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், பிரஜ் தலைவர் பிரமோத் சௌத்ரி, இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இத்திட்டம் நிலையான உயிரியல் விமான எரிபொருள் அல்லது நிலையான விமான எரிபொருளை உற்பத்தி செய்யும். இந்த பயோ ஏவியேஷன் எரிபொருளுக்கு உலகச் சந்தையில் அதிக கிராக்கி இருக்கிறது. இதற்குத் தேவையான மூலப்பொருட்களை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது.

உயிரி எரிபொருளுக்காக உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவிடம் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளன. பிரேசிலுக்கு முன் இந்தியாவில் இத்திட்டத்தை அமைத்ததற்காக பிரஜ் உத்யோக் குழுமத்தின் பொறியாளர்களுக்கு வாழ்த்துகள். இத்திட்டம் உண்மையிலேயே உலகிற்கு முன்னோடியாக இருக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

திறப்பு விழா முடிந்ததும், அமைச்சர் மற்ற அதிகாரிகளுடன் இணைந்து திட்டத்தை பார்வையிட்டதுடன், அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்தும் திருப்தி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஆல்கஹாலில் இருந்து தயாரிக்கப்பட்ட பயோ ஏவியேஷன் எரிபொருளைப் பயன்படுத்தி புனேயில் இருந்து டெல்லிக்கு விமானம் இயக்கப்பட்டது. அப்போது, ​​அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் அமைச்சர் பூரி வரவேற்றார்.

இந்தியாவில் பயன்படுத்தப்படும் மொத்த விமான எரிபொருளில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தையாவது இந்த நிலையான பயோ ஏவியேஷன் எரிபொருளுடன் கலந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 14 கோடி லிட்டர் உயிரி எரிபொருள் தேவைப்படும். ஆகவே, எதிர்காலத்தில் இந்த உயிரி எரிபொருள் உற்பத்தித் தொழிலுக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: jet fuelfirst pilot projectLaunchespuneHardeep Singh PuriUnion Ministeralcohol
Share
Tweet
SendShare
Previous Post

மேகாலயா மக்களுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

அகமதாபாத் விமான நிலையம் – சுமார் 49 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்!

Related News

பயிற்சி நிறைவையொட்டி அசாத்திய திறமையை வெளிப்படுத்திய வீரர்கள்

ஆக்கிரமிப்பை தட்டி கேட்ட பெண்; விரட்டி விரட்டி தாக்கிய தவெக நிர்வாகி

டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்டுக்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் போராட்டம்

செப்.9ல் தவெக ஆலோசனைக் கூட்டம்; கூட்டணி கட்சியினருக்கு அழைப்பு

அசிம் முனீரின் பிடியில் பாகிஸ்தான் எதிர்காலம் : இந்தியாவுக்கு ஆபத்தா? – சிறப்பு தொகுப்பு!

தற்கொலை படை தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தினர் 25 பேர் பலி – பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் பொறுப்பேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்தடுத்த சாதனைகள் படைக்க தயார் – இஸ்ரோ தலைவர் நாராயணன்

திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 4 பேர் பலி!

நாட்டின் விண்வெளித் திட்டத்திற்கு புதிய வலிமை – பிரதமர் மோடி பாராட்டு!

இமயமலை பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் – மத்திய அரசு ஆய்வு!

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கண்ணனின் புல்லாங்குழல் இசையைப் போல நம் வாழ்விலும் இனிமை நிறைந்திடட்டும் – நயினார் வாழ்த்து!

லைக் போட்டால் திருப்பதி லட்டு – தமிழக இளைஞர் குறித்து திருப்பதி கோயில் அதிகாரிகள் விசாரணை!

பதவியை ராஜினாமா செய்தால் சலுகைகளை ரத்து செய்ய கோரிய வழக்கு – மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 6 விமானங்கள்!

மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்பு – முதல்வர் விஜய்க்கு நடிகர் அஜித் வாழ்த்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies