தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார்.
அயோத்தி ராமர் கோவிலில் குழந்தை ராமர்சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ள நிலையில், 8 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக விழாவை கோயில்களில் எல்இடி திரைமூலம் ஒளிபரப்பு செய்ய பாஜகவினர் முயன்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தனியாருக்கு சொந்தமான புகழ்பெற்ற காமாட்சி கோவிலின் உள்ளே, காலை 8 மணி முதல் பஜனைகள் தொடங்கியுள்ளது. அப்போது சாதாரண உடையில் வந்த காவலர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த LED திரைகளை அகற்றியுள்ளனர். ஒரு கோவிலில், தனிப்பட்ட முறையில் கும்பாபிஷேக நிகழ்வை பார்க்கிறார்கள்.
இதனை தடுப்பது உரிமையை மீறிய செயலாகும். தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு, மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டது. இந்து விரோத திமுக இப்போது பிரதமர் மீதான வெறுப்பை வெளிப்படுத்துகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 466 எல்இடி திரைகள் மூலம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் எல்இடி திரைகளை அகற்றியுள்ளனர். இதன் காரணமாக கோயில்களுக்க எல்இடி விநியோகம் செய்தவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த செயல் வணிகர்களின் “வயித்திலே அடிப்பதாகும் என விமர்சித்துள்ளார்.
The repression saga in TN continues: a small village (not more than 200 houses) where people wanted to celebrate #AyodhyaRamMandir and watch PM @narendramodi participate have been told that unless the District Collector gives permission they shall not install the hired LED…
— Nirmala Sitharaman (@nsitharaman) January 22, 2024