பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Mar 15, 2026, 08:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 22, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரலாற்று நகரமான அயோத்தியின் இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டையின் சகாப்த தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் இராமர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை செய்தார். நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரேத மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

விழாவில், முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், சச்சின் தெண்டுல்கர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும், அரசியல் கட்சிகளின் தலைவரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “தேசத்தின் பெருமையை மீண்டும் எழுப்புவதைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட தருணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 11 நாட்கள் கடுமையான அனுஷ்டானத்திற்குப் பிறகு, அயோத்தியில் இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

ஜனவரி 22, நாகரீகப் பாதையில் தெய்வீகத்துடன் ஒரு முயற்சியின் தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பிரபு ஸ்ரீராமின் நேர்மை, மன்னிப்பு, துணிச்சல், பணிவு, அக்கறை, கருணை ஆகிய பண்புகளை வாழ்வின் ஒரு வழியாகப் புகுத்துவதற்கு நாட்டு மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: congratulates peopleayodhyaJagdeep DhankharVice PresidentRam MandirPran Pratishta
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு!

Next Post

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies