பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Jul 25, 2025, 07:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரான் பிரதிஷ்டை: துணை குடியரசுத் தலைவர் வாழ்த்து!

Web Desk by Web Desk
Jan 22, 2024, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வரலாற்று நகரமான அயோத்தியின் இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டையின் சகாப்த தினத்தை முன்னிட்டு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 1,800 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டிருக்கும் இராமர் கோவிலில், இன்று கும்பாபிஷேகம் மற்றும் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை ஆகியவை வெகு சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை செய்தார். நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரேத மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் பங்கேற்று சிறப்பு பூஜைகளில் ஈடுபட்டனர்.

விழாவில், முகேஷ் அம்பானி போன்ற தொழிலதிபர்களும், ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்களும், சச்சின் தெண்டுல்கர், அஜய் ஜடேஜா உள்ளிட்ட கிரிக்கெட் நட்சத்திரங்களும், அரசியல் கட்சிகளின் தலைவரும் கலந்து கொண்டு ஸ்ரீராமரை தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில், அயோத்தி இராம ஜென்ம பூமியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “தேசத்தின் பெருமையை மீண்டும் எழுப்புவதைக் குறிக்கும் ஒரு கொண்டாட்ட தருணத்தைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 11 நாட்கள் கடுமையான அனுஷ்டானத்திற்குப் பிறகு, அயோத்தியில் இராம் லல்லாவின் கும்பாபிஷேக விழாவை வழிநடத்தும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்.

ஜனவரி 22, நாகரீகப் பாதையில் தெய்வீகத்துடன் ஒரு முயற்சியின் தருணமாக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், பிரபு ஸ்ரீராமின் நேர்மை, மன்னிப்பு, துணிச்சல், பணிவு, அக்கறை, கருணை ஆகிய பண்புகளை வாழ்வின் ஒரு வழியாகப் புகுத்துவதற்கு நாட்டு மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: Jagdeep DhankharVice PresidentRam MandirPran Pratishtacongratulates peopleayodhya
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 16-வது முறையாக நீட்டிப்பு!

Next Post

குஜராத் படகு விபத்து: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Related News

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies