அயோத்தி ராமர் கோவில் விழா : தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!
Mar 15, 2026, 09:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோவில் விழா : தமிழகத்தில் களைகட்டிய கொண்டாட்டம்!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 07:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புண்ணிய பூமியான அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலையை, பாரதப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்தார்.

இதன் மூலம் கோடிக்கணக்கான பக்தர்களின் தியாகம் மற்றும் தவத்தின் பலனாய், பல தலைமுறைகளின் கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதந் மூலம் இந்தியாவில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டையொட்டி, நாடு முழுவதும் பக்தி பரவசம் மற்றும் கோலாகல கொண்டாட்டம் நடைபெற்றது. குறிப்பாக, தமிழகத்தில், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

அயோத்தியில் நடைபெற்ற புனித வைபவத்தை, சென்னை கோபாலபுரம் வேணுகோபால சுவாமி கோவிலில், பக்தர்களுடன் அமர்ந்து, பெரிய திரையில் நேரடி ஒளிபரப்பைக் கண்டுகளித்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரதகானா சபாவில் நடைபெற்ற சென்னையில் அயோத்தி என்ற நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் இசையமைப்பாளரும், எம்பியுமான இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டர்.

கோவை தெற்கு தொகுதி மேட்டுப்பாளையம் சாலை காமராஜபுரம் பகுதி ஶ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சென்னை ஸ்ரீவல்லப விநாயகர் கோவிலில் நடைபெற்ற அன்னதானம் நிகழ்ச்சியில், தமிழக பாஜக துணைத் தலைவர் கரு.நாகரஜான் கலந்து கொண்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் திருக்கோவிலில், இந்து முன்னணி அமைப்பு சார்பில், பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் இராமர் மடம் அருகே உள்ள பெருமாள் திருக்கோவிலில், ஆராதனை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டை விழா, மதுரை ஆர்.எஸ்.எஸ். அலுவலக காரியாலயத்தில், பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது. அப்போது, கோ பூஜை செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோல, மதுரையில் கேசவ சேவா கேந்திரத்தில் ராமர் கோவில் திறப்பு விழா சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்தில், அயோத்தி பால ராமர் கோவில் பிராணப் பிரதிஷ்டை பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டது.

இராமநாதபுரம் தேவிப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு உலகம்மன் கோவிலில், ஆர்.எஸ்.எஸ். சார்பில் அதன் நிர்வாகிகள், ராமர் பாடல்களை பாடி வழிபட்டனர்.

பெரம்பலூரில் உள்ள மதன கோபால சுவாமி திருக்கோவிலில், ராம பக்தர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து பஜனை பாடி, ராமரை போற்றி வணங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் பேசிப்பாறை அருள்மிகு பேச்சியம்மன் கோவிலில், மாற்றுத்திறனாளி தேவசகாயம் என்பவர், குத்துவிளக்கு ஏற்றிவைக்க, பிராணப் பிரதிஷ்டை வெகு சிறப்பாக நடைபெற்றது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் அமராவதிபுதூர் ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அப்போது, பக்கதர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

சென்னை வண்ணாரப்பேட்டையில், அயோத்தி பால ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, பிரமாண்ட ஊர்வலம் நடைபெற்றது. இதில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் பலரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு ராமநாமம் பாடினர்.

திருச்சி மாவட்ட நீதிமன்றம் அருகே அயோத்தியில் பால ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி, வழக்கறிஞர்கள் பக்தி பரவத்துடன் வழிபாடு நடத்தினர்.

கோவை தண்டு மாரியம்மன் கோவிலில், ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில், வேணுகோபால சுவாமி திருக்கோவிலில், சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் ராமர் கோவிலில் கும்பாபிஷேகத்தையொட்டி, சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

அயோத்தியில், ஶ்ரீ பால ராமர் திருவுருவச் சிலை பிராணப் பிரதிஷ்டையை யொட்டி, திருப்போரில் உள்ள திருக்கோவிலில் எல்இடி தொலைக்காட்சி மூலம் பொது மக்களுக்கு அயோத்தி பால ராமர் கும்பாபிஷேக நிகழ்ச்சியை பொதுமக்கள் பக்தி பரவத்துடன் கண்டனர்.

நெல்லை டவுன் இந்து முன்னணி சார்பில் அயோத்தி பால ராமர் கும்பாபிஷேக விழா நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

சென்னை மேற்கு மேம்பலம் காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் இந்து முன்னணி சார்பில், பாஜனை பாடப்பட்டது. அப்போது, பக்தர்களும், பொது மக்களும் ரதவீதி வழியாக வீதி உலா வந்தனர்.

கானாடுகாத்தான் வெட்டிவயல் ஆஞ்சநேயர் திருக்கோவிலில், ராமர் கும்பாபிஷேகத்தை யொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

மதுரை மாவட்டம் அனையூரில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில், ராமர் கோவில் சிறப்பு விழா சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதபோல, தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோவில்களில் ஏராளமான பொது மக்கள் பக்தி பரவத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags: ramar celebrationtamilnaduspecial poojatamilnadu templesAyothi ramar temple live
ShareTweetSendShare
Previous Post

ராமர் கோவில் விழா : கயானாவில் களைகட்டிய கொண்டாட்டம்!

Next Post

குழந்தை இராமரும் குதூகல இந்தியாவும்! – அண்ணாமலை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies