எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!
Aug 19, 2025, 09:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைக்கும் 5 முதல் 18 வயது வரையுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு விருது வழங்கினார். இவர்கள், 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த விருது வழங்கும் விழா இளம் சாதனையாளர்களின் அற்புதமான திறன்களையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளுக்கு பல்துறை திறமைகள் இருக்கின்றன. மேலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது.

குழந்தைகளின் திறமையையும், ஆற்றலையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது நமது கடமை. இன்று இந்தியாவிடம் பெருமளவிலான இளைஞர்கள் என்ற வகையில் விலைமதிப்பற்ற வளம் இருக்கிறது. இந்த வளமானது இந்தியா மட்டுமன்றி முழு உலகத்தின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.

இளம் தலைமுறையினரிடம் உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. குறைவான உடல் செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக இருந்த பல நோய்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டையாவது கற்று, அதில் பங்கேற்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டு அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்றார்.

இந்நிகழ்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இத்துறையின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதேபோல, விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.

Tags: Droupadi MurmuPresidentRashtriya Bal Puraskar
ShareTweetSendShare
Previous Post

சூரிய சக்தி மேற்கூரை அமைப்பு! – தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவு!

Next Post

இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies