எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!
Mar 15, 2026, 03:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைக்கும் 5 முதல் 18 வயது வரையுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு விருது வழங்கினார். இவர்கள், 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த விருது வழங்கும் விழா இளம் சாதனையாளர்களின் அற்புதமான திறன்களையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளுக்கு பல்துறை திறமைகள் இருக்கின்றன. மேலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது.

குழந்தைகளின் திறமையையும், ஆற்றலையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது நமது கடமை. இன்று இந்தியாவிடம் பெருமளவிலான இளைஞர்கள் என்ற வகையில் விலைமதிப்பற்ற வளம் இருக்கிறது. இந்த வளமானது இந்தியா மட்டுமன்றி முழு உலகத்தின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.

இளம் தலைமுறையினரிடம் உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. குறைவான உடல் செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக இருந்த பல நோய்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டையாவது கற்று, அதில் பங்கேற்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டு அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்றார்.

இந்நிகழ்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இத்துறையின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதேபோல, விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.

Tags: Droupadi MurmuPresidentRashtriya Bal Puraskar
ShareTweetSendShare
Previous Post

சூரிய சக்தி மேற்கூரை அமைப்பு! – தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவு!

Next Post

இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies