எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!
Apr 29, 2026, 08:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை: திரௌபதி முர்மு அறிவுரை!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

எதிர்காலத்தை மேம்படுத்த சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியிருக்கிறார்.

கலை மற்றும் கலாச்சாரம், துணிச்சல், புத்தாக்கம், சமூக சேவை மற்றும் விளையாட்டு உள்ளிட்ட 6 துறைகளில் சாதனை படைக்கும் 5 முதல் 18 வயது வரையுடைய சிறுவர், சிறுமிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரதான் மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட 9 சிறுவர்கள், 10 சிறுமிகள் என மொத்தம் 19 குழந்தைகளுக்கு விருது வழங்கினார். இவர்கள், 2 ஆர்வமுள்ள மாவட்டங்கள் உட்பட 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.

இந்நிகழ்வில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, “இந்த விருது வழங்கும் விழா இளம் சாதனையாளர்களின் அற்புதமான திறன்களையும், திறமைகளையும் ஊக்குவிக்கும் ஒரு வாய்ப்பாகும். குழந்தைகளுக்கு பல்துறை திறமைகள் இருக்கின்றன. மேலும், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் அவர்கள் தமக்கான அடையாளத்தை உருவாக்குவதற்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது.

குழந்தைகளின் திறமையையும், ஆற்றலையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களுக்கு சரியான வழியைக் காட்டுவது நமது கடமை. இன்று இந்தியாவிடம் பெருமளவிலான இளைஞர்கள் என்ற வகையில் விலைமதிப்பற்ற வளம் இருக்கிறது. இந்த வளமானது இந்தியா மட்டுமன்றி முழு உலகத்தின் முன்னேற்றத்திலும் முக்கியப் பங்கை வகிக்க முடியும்.

இளம் தலைமுறையினரிடம் உடல் செயல்பாடுகள் குறைந்து வருகிறது. குறைவான உடல் செயல்பாடுகளால் குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு மிகவும் அரிதாக இருந்த பல நோய்கள் இன்று அதிகரித்து வருகிறது. ஆகவே, குறைந்த பட்சம் ஒரு விளையாட்டையாவது கற்று, அதில் பங்கேற்க வேண்டும். குழந்தைகள் விளையாட்டை ஒரு தொழிலாக எடுத்துக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால், விளையாட்டு அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்” என்றார்.

இந்நிகழ்வின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, இத்துறையின் இணை அமைச்சர் முன்ஜ்பரா மகேந்திரபாய் ஆகியோர் உடனிருந்தனர். விருது பெற்றவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்துரையாடுகிறார். அதேபோல, விருது பெற்றவர்கள் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்பார்கள்.

Tags: Droupadi MurmuPresidentRashtriya Bal Puraskar
ShareTweetSendShare
Previous Post

சூரிய சக்தி மேற்கூரை அமைப்பு! – தேசிய அளவிலான இயக்கத்தைத் தொடங்கப் பிரதமர் மோடி உத்தரவு!

Next Post

இந்தியப் பங்குச்சந்தை வரலாறு காணாத ஏற்றம்!

Related News

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies