இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Jul 24, 2025, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், “அயோத்தி இராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே விரதம் இருந்து தவம் செய்தார். இனிமேல் நாம் அனைவரும் விரதமிருந்து தவம் செய்ய வேண்டும்.

அயோத்தியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது. மேலும், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கிறது. ஏராளமான மக்களின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இராமர் இராம ஜென்ம பூமிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஆகவே, அம்மக்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இராமர் ஏன் இராம ஜென்ம பூமியை விட்டுப் போனார் என்று பார்த்தால், அயோத்தியில் மோதல் நிலவியதுதான் காரணம். தற்போது இராம இராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது.

எனவே, மக்களாகிய நாம் அனைத்து சர்ச்சைகளையும் விட்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இராமர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் உண்மையான நடைமுறை.

நாம் நமது நாட்டை உலகத்தின் தலைமையாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தங்களது வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக் கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதுதான் இரக்கத்தின் பொருள். ஆகவே, யாரிடமாவது துக்கத்தையும், வலியையும் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

Tags: AyodyainagurationRSS Chiefmohan bhagwatRam Temple
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Next Post

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

Related News

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

Load More

அண்மைச் செய்திகள்

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies