இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Jun 15, 2026, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், “அயோத்தி இராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே விரதம் இருந்து தவம் செய்தார். இனிமேல் நாம் அனைவரும் விரதமிருந்து தவம் செய்ய வேண்டும்.

அயோத்தியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது. மேலும், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கிறது. ஏராளமான மக்களின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இராமர் இராம ஜென்ம பூமிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஆகவே, அம்மக்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இராமர் ஏன் இராம ஜென்ம பூமியை விட்டுப் போனார் என்று பார்த்தால், அயோத்தியில் மோதல் நிலவியதுதான் காரணம். தற்போது இராம இராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது.

எனவே, மக்களாகிய நாம் அனைத்து சர்ச்சைகளையும் விட்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இராமர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் உண்மையான நடைமுறை.

நாம் நமது நாட்டை உலகத்தின் தலைமையாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தங்களது வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக் கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதுதான் இரக்கத்தின் பொருள். ஆகவே, யாரிடமாவது துக்கத்தையும், வலியையும் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

Tags: RSS Chiefmohan bhagwatRam TempleAyodyainaguration
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Next Post

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies