இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!
Aug 3, 2026, 10:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது: ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இராம இராஜ்ஜியம் தொடங்கி விட்டது. ஆகவே, எல்லா சர்ச்சைகளையும் விட்டுவிட்டு நாம் ஒன்றுபட்டு இருக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன் பிறகு, அயோத்தியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோகன் பகவத் பேசுகையில், “அயோத்தி இராமர் சிலை பிரதிஷ்டைக்காக பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே விரதம் இருந்து தவம் செய்தார். இனிமேல் நாம் அனைவரும் விரதமிருந்து தவம் செய்ய வேண்டும்.

அயோத்தியில் இராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதன் மூலம் இந்தியாவின் சுயமரியாதை திரும்பி இருக்கிறது. மேலும், புதிய இந்தியாவின் அடையாளமாக மாறி இருக்கிறது. ஏராளமான மக்களின் தவத்தால் 500 ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இராமர் இராம ஜென்ம பூமிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்.

ஆகவே, அம்மக்களின் உழைப்புக்கும், தியாகத்துக்கும் நான் தலைவணங்குகிறேன். அதேசமயம், இராமர் ஏன் இராம ஜென்ம பூமியை விட்டுப் போனார் என்று பார்த்தால், அயோத்தியில் மோதல் நிலவியதுதான் காரணம். தற்போது இராம இராஜ்ஜியம் மீண்டும் தொடங்கி விட்டது.

எனவே, மக்களாகிய நாம் அனைத்து சர்ச்சைகளையும் விட்டு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். இராமர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். ஒற்றுமையாக வாழ்வதே ஹிந்து மதத்தின் உண்மையான நடைமுறை.

நாம் நமது நாட்டை உலகத்தின் தலைமையாக மாற்ற ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மேலும், தங்களது வருமானத்தில் குறைந்தபட்சத்தை வைத்துக் கொண்டு, மீதியை உதவியாகத் திரும்பக் கொடுக்க வேண்டும். இதுதான் இரக்கத்தின் பொருள். ஆகவே, யாரிடமாவது துக்கத்தையும், வலியையும் கண்டால் நீங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்” என்றார்.

Tags: RSS Chiefmohan bhagwatRam TempleAyodyainaguration
ShareTweetSendShare
Previous Post

அயோத்தியில் நாம் கண்ட காட்சிகள் நமது நினைவுகளில் என்றென்றும் நிலைத்திருக்கும்! – பிரதமர் மோடி

Next Post

மிசோராமில் விமான விபத்து : 6 பேர் காயம்! 

Related News

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில மோசடி விவகாரம் – மேலும் இருவர் சஸ்பெண்ட்!

காவலர் தேர்வில் குளறுபடி; தேர்வர்கள் போராட்டம்

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஆடிப்பெருக்கை முன்னிட்டு நீர்நிலைகளில் குவிந்த பக்தர்கள் – புனித நீராடி வழிபாடு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமின் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

உடல் உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலம் – தமிழ்நாட்டிற்கு விருது!

தவெக நிர்வாகிகளுக்கு அரசு பதவி – அரசாணை வெளிப்படையாக வெளியிடப்படவில்லை என குற்றச்சாட்டு!

இன்றைய தங்கம் விலை!

டெல்லி போராட்டத்தின் போது காவல்துறை சீருடையில் பாகிஸ்தான் பயங்கரவாதி தாக்குதல் நடத்த திட்டம் – விசாரணையில் அம்பலம்!

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டி நிறைவு – 39 பதக்கங்களுடன் 4-வது இடம் பிடித்தது இந்தியா!

அபிஜித் தீப்கேவின் நிதி ஆதாரங்கள் குறித்து புதிய சர்ச்சை – அமெரிக்கா படிப்பு செலவு மற்றும் ஒரு கோடி நன்கொடை தொடர்பாக குவியும் புகார்கள்!

கடிதம் அனுப்பிய மதுரை பெட்டிக்கடைக்காரருக்கு பிரதமர் அனுப்பிய நன்றி கடிதம்!

காவிரி நீர் திறப்பு குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை – வினோஜ் பி செல்வம் கேள்வி!

முதலமைச்சர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வரும் – செங்கோட்டையன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies