குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்திகள் குறித்து அவதூறு: மன்னிப்புக் கேட்ட பீகார் துணை முதல்வர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 23, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்திகள் குறித்து அவதூறாகப் பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அவர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர்வது குறித்து பதிலளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பீகார் மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர், லாலு பிரசாத் யாதவின் மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ். இவர், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 22-ம் தேதி நடந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசினார்.

மேலும், குஜராத்திகள் மட்டுமே நாட்டில் ஏமாற்றுக்காரர்களாக இருக்கிறார்கள். அவர்களது தவறுகள், மோசடிகள் மன்னிக்கப்படுகின்றன என்று கூறினார். இது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து, குஜராத்தைச் சேர்ந்த ஹரேஷ்பாய் பிராணசங்கர் மேத்தா என்பவர் தேஜஸ்வி யாதவ் மீது வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வந்த நிலையில், வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி தேஜஸ்வி யாதவ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே, குஜராத் உயர் நீதிமன்றத்தில் தேஜஸ்வி யாதவ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குஜராத்திகள் குறித்து பேசியதற்கு மன்னிப்புக் கோரியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, உஜ்ஜல் புயான் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தனது பேச்சுக்கு தேஜஸ்வி யாதவ் மன்னிப்புக் கோரி இருக்கிறார். ஆகவே, வழக்கைத் தொடர வேண்டுமா என்று 29-ம் தேதிக்குள் புகார்தாரர் தெரிவிக்கும்படி நீதிபதிகள் கூறினர்.

மேலும், தேஜஸ்வி மன்னிப்புக் கேட்டிருப்பதால், நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Tags: BiharTejashwi Yadav!GujratisDeputy CMapologiszed
ShareTweetSendShare
Previous Post

உத்தர பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து!

Next Post

இந்தியாவில் 236 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies