உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தில் நேற்று இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி கட்டுப்படுத்தினர்.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அருகே அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதனை அடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த மக்கள் பதறி அடித்து கொண்டு வெளியே வந்தனர்.
இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கட்டடத்தில் இருந்த மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை, தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி, கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீவிபத்தில் வீட்டிற்குள் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.