ஸ்ரீராமரே மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துவார்: மதுரை ஆதீனம்!
Oct 25, 2025, 06:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்ரீராமரே மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்துவார்: மதுரை ஆதீனம்!

Web Desk by Web Desk
Jan 23, 2024, 02:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடுத்த பிரதமரும் நரேந்திர மோடிதான். அவரை அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள் என்று மதுரை ஆதீனம் கூறியிருக்கிறார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா ஆகியவை நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு இராம் லல்லா சிலையை பிரான் பிரதிஷ்டை செய்தார்.

இந்த நிகழ்ச்சி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த வகையில், இராமநாதபுரத்திலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு கண்டுகளித்தார்.

இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், “பிரதமர் மோடி ஏன் மீண்டும் ஆட்சிக்கு வருவார் என்று கேட்கின்றனர். திருமூலர் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்றார். அது இன்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவித்தனர்.

ராஜீவ் காந்தி தலைமையில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு இந்திய இராணுவத்தை அனுப்பி இலங்கையில் ராஜபக்சே என்ற ரத்த பக்சே அரசுடன் சேர்ந்து இந்த படுபாதகத்தை செய்தது. அன்று யாரும் ஏன் என்று கேட்கவில்லை. ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட மோசமாக தமிழர்களை கொலை செய்தனர்.

ஆனால், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு பிரதமர் மோடி இன்று வீடுகளை கட்டி கொடுத்திருக்கிறார். மேலும், பல்வேறு உதவிகளையும் செய்திருக்கிறார். தவிர, பிரதமர் மோடி ஆன்மீக ஈடுபாட்டுடன் இருக்கிறார். எந்த பிரதமராவது கடலில் குளித்தார்களா? மோடி கடலில் குளித்தார். சாதுக்களிடம் ஆசீர்வாதம் பெறுகிறார்.

பிரதமர் மோடியைப் போல் செயல்பட யாரும் இல்லை. அயோத்தி இராமர் கோவில் பிரான் பிரதிஷ்டை நிகழ்ச்சிகளை திரைகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய அரசு தடை விதித்தாலும் மக்கள் எழுச்சியுடன் திரையில் பார்த்து வருகின்றனர்.

எதை செய்யக்கூடாது என்கிறோமோ, அதனை அதிகமாக செய்வார்கள். அடுத்த தேர்தலிலும் மோடிதான் வெற்றி பெறுவார். அந்த ஸ்ரீராமனே மீண்டும் ஆட்சியில் அமர்த்துவார். தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது” என்றார்.

Tags: PM ModiPraisedMadurai Adinam
ShareTweetSendShare
Previous Post

நவீன நீர்வழிச் சாலை திட்டத்தின் தலைவரான பேராசிரியர் ஏ.சி.காமராஜ் மறைவு! – அண்ணாமலை இரங்கல்

Next Post

அயோத்தி ராமர் கேயில் அறிவொளி மற்றும் அமைதிக்கான நுழைவாயிலாக இருக்கட்டும்! – அதானி

Related News

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies