வட இந்தியாவை வாட்டி எடுக்கும் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, இரயில்கள் தாமதம்!
Mar 15, 2026, 06:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட இந்தியாவை வாட்டி எடுக்கும் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, இரயில்கள் தாமதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடர்ந்த பனி மூட்டம், கடுமையான குளிர் ஆகியவற்றால் வட இந்தியா தத்தளித்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வடக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் அடர்த்தியான மூடுபனி நிலவும். டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் இந்த நிலை நிலவும்.

அடுத்த 2 முதல் 3 நாட்களில் மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும். தவிர, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான குளிர் நிலவும்.

அதேபோல, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நிலத்தடி உறைபனி நிலைகள் கணிக்கப்பட்டுள்ளன. தவிர, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 28-ம் தேதிவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

வட இந்தியாவில் மூடுபனி மற்றும் கடும்குளிர் தொடர்ந்து நிலவி வருவதால், தேசிய தலைநகர் டெல்லியில் இரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய இரயில்வேயின் கூற்றுப்படி, இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 24 இரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, அசம்கர் – டெல்லி ஜே.என். கைஃபியத் எக்ஸ்பிரஸ், ரேவா – ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை அட்டவணையை விட 6 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயங்கும். அதேபோல, பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச் செயல்பாடுகள் தாமதமாவதோடு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

Tags: North Indiacold waveDense Fog
ShareTweetSendShare
Previous Post

நாளை வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா! – வண்ண விளக்குகளால் ஜொலித்த மாரியம்மன் கோயில்!

Next Post

குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies