வட இந்தியாவை வாட்டி எடுக்கும் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, இரயில்கள் தாமதம்!
Jun 15, 2026, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வட இந்தியாவை வாட்டி எடுக்கும் கடும் குளிர்: விமானங்கள் ரத்து, இரயில்கள் தாமதம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அடர்ந்த பனி மூட்டம், கடுமையான குளிர் ஆகியவற்றால் வட இந்தியா தத்தளித்து வரும் நிலையில், மேலும் 5 நாட்களுக்கு வடக்கு ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதே நிலை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அடுத்த 5 நாட்களுக்கு இந்தியாவில் அடர்த்தியான மூடுபனி நிலவும். டெல்லி, சண்டிகர், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் இரவு மற்றும் காலை நேரங்களில் இந்த நிலை நிலவும்.

அடுத்த 2 முதல் 3 நாட்களில் மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்கம், அஸ்ஸாம், மேகாலயா, மிசோராம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களில் அடர்ந்த மூடுபனி இருக்கும். தவிர, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடுமையான குளிர் நிலவும்.

அதேபோல, இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேசத்தில் நிலத்தடி உறைபனி நிலைகள் கணிக்கப்பட்டுள்ளன. தவிர, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 28-ம் தேதிவரை பல இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் நேற்று குறைந்தபட்ச வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.

வட இந்தியாவில் மூடுபனி மற்றும் கடும்குளிர் தொடர்ந்து நிலவி வருவதால், தேசிய தலைநகர் டெல்லியில் இரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்திய இரயில்வேயின் கூற்றுப்படி, இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி செல்லும் 24 இரயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

குறிப்பாக, அசம்கர் – டெல்லி ஜே.என். கைஃபியத் எக்ஸ்பிரஸ், ரேவா – ஆனந்த் விஹார் எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஸ்வர் – புதுடெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆகியவை அட்டவணையை விட 6 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக இயங்கும். அதேபோல, பனிமூட்டம் காரணமாக டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச் செயல்பாடுகள் தாமதமாவதோடு, சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

Tags: North Indiacold waveDense Fog
ShareTweetSendShare
Previous Post

நாளை வண்டியூர் மாரியம்மன் தெப்ப திருவிழா! – வண்ண விளக்குகளால் ஜொலித்த மாரியம்மன் கோயில்!

Next Post

குடியரசு தின அணிவகுப்பில் அயோத்தி ராமர் கோயில் அலங்கார ஊர்தி!

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies