இராமநாதபுரம் – செகந்திராபாத் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு இரயில்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருச்சி கோட்ட இரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, செகந்திராபாத் – இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு இரயிலானது (வண்டி எண் – 07695) ஜனவரி 31-ஆம் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமாா்க்கமாக, இராமநாதபுரம் – செகந்திராபாத் வாராந்திர சிறப்பு இரயிலானது (வண்டி எண் – 07696) வரும் 26 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
விழுப்புரம் – திருப்பதி – விழுப்புரம் இடையே இயக்கப்படும் முன்பதிவில்லா விரைவு இரயில்களானது (வண்டி எண் – 16854 மற்றும் 16853) வரும் 29 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில், காட்பாடி – திருப்பதி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
மேலும், மயிலாடுதுறை – மைசூர் விரைவு இரயிலானது (வண்டி எண் – 16231) வரும் 27 மற்றும் பிப்ரவரி 3 ஆகிய தேதிகளில், மயிலாடுதுறையில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக மாலை 6.55 மணிக்குப் புறப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.