பரீக்ஷா பே சர்ச்சா: ஓவியப் போட்டியில் 60,000 பேர் பங்கேற்பு!
Oct 26, 2025, 02:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரீக்ஷா பே சர்ச்சா: ஓவியப் போட்டியில் 60,000 பேர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Jan 24, 2024, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரீக்ஷா பே சர்ச்சா 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், பரீக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய மொழியாக்க விவாதம்) நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் தொடர்பான பயம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஏதேனும் ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடுவார். போட்டியில் வெற்றிபெறும் பங்கேற்பாளர்களுக்கு பிரதமருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் நிலவி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி ஜனவரி 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2.26 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம், 657 கேந்திரிய வித்யாலயா மற்றும் 122 நவோதயா வித்யாலயா மற்றும் நாடு முழுவதும் உள்ள 774 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இது தவிர, ஜனவரி 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மராத்தான், இசைப் போட்டி, நினைவுப் போட்டி, நுக்கத் நாடகம், போஸ்டர் தயாரித்தல் மற்றும் யோகா, தியான அமர்வுகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெறுபவர்கள் பிரதமர் மோடியுடன் நேரடியாக உரையாடுவார்கள்.

Tags: ParticipatePariksha Pe CharchaPainting Competition60 thousand students
ShareTweetSendShare
Previous Post

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது: பிரதமர் மோடி!

Next Post

மேற்கு வங்க முதல்வர் மம்தா சென்ற கார் விபத்து! 

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies