பரீக்ஷா பே சர்ச்சா: ஓவியப் போட்டியில் 60,000 பேர் பங்கேற்பு!
Jun 15, 2026, 02:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பரீக்ஷா பே சர்ச்சா: ஓவியப் போட்டியில் 60,000 பேர் பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 24, 2024, 07:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரீக்ஷா பே சர்ச்சா 2024-ஐ முன்னிட்டு நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

மத்திய கல்வி அமைச்சகம் சார்பில், பரீக்ஷா பே சர்ச்சா (தேர்வு பற்றிய மொழியாக்க விவாதம்) நிகழ்ச்சி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வுகள் தொடர்பான பயம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் ஏதேனும் ஒரு போட்டியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு தேர்வு செய்யப்படுபவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைக்கும்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாடுவார். போட்டியில் வெற்றிபெறும் பங்கேற்பாளர்களுக்கு பிரதமருடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பு வழங்கப்படும். எனவே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவர்கள் மத்தியில் ஆர்வம் நிலவி வருகிறது.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பரீக்ஷா பே சர்ச்சா நிகழ்ச்சி ஜனவரி 29-ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்க 2.26 கோடி பேர் பதிவு செய்திருந்தனர். இவர்களுக்கான போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, நேற்று நடைபெற்ற தேசிய அளவிலான ஓவியப் போட்டியில் 60,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மொத்தம், 657 கேந்திரிய வித்யாலயா மற்றும் 122 நவோதயா வித்யாலயா மற்றும் நாடு முழுவதும் உள்ள 774 மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. இது தவிர, ஜனவரி 12-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை மராத்தான், இசைப் போட்டி, நினைவுப் போட்டி, நுக்கத் நாடகம், போஸ்டர் தயாரித்தல் மற்றும் யோகா, தியான அமர்வுகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றிபெறுபவர்கள் பிரதமர் மோடியுடன் நேரடியாக உரையாடுவார்கள்.

Tags: ParticipatePariksha Pe CharchaPainting Competition60 thousand students
ShareTweetSendShare
Previous Post

இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பு நாரி சக்திக்கு அர்ப்பணிக்கப்பட்டது: பிரதமர் மோடி!

Next Post

மேற்கு வங்க முதல்வர் மம்தா சென்ற கார் விபத்து! 

Related News

முதலமைச்சர் விஜய் சங்கீதா விவாகரத்து வழக்கு; திங்களன்று விசாரணை

ஏ.ஐ தொழில்நுட்பத்துறைக்கு வளமான எதிர்காலம்; பிரான்சில் பிரதமர் மோடி பேச்சு

பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் சோதனை வெற்றி : DRDO அசத்தல் சாதனை – சிறப்பு தொகுப்பு!

பனிக்கட்டி சூழ்ந்த ஏரியில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய இந்திய தொழிலாளி : கெளரவ குடிமகன் அந்தஸ்து வழங்கி கவுரவித்த ருமேனியா – சிறப்பு தொகுப்பு!

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு பாராட்டு – காலில் விழுந்து ஆசி பெற்ற தவெக எம்எல்ஏ!

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies