தினமலர் நாளிதழ் மீது இந்து சமய அறநிலையத்துறை போலீஸில் புகார்!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தினமலர் நாளிதழ் மீது இந்து சமய அறநிலையத்துறை போலீஸில் புகார்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 25, 2024, 01:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத உணர்வைத் தூண்டி பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில், உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாக தினமலர் மதுரை பதிப்பு மீது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி இராம ஜென்ம பூமியில் 1,800 கோடி ரூபாய் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக ஸ்ரீராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் தரைத்தளப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கடந்த 22-ம் தேதி கும்பாபிஷேக விழா மற்றும் இராம் லல்லா சிலை பிரான் பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, இராம் லல்லா சிலையை பிரதிஷ்டை செய்தார். இதையொட்டி, நாட்டு மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் இராம ஜோதி ஏற்றியும், தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடத்தும்படியும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த வகையில், தமிழகத்தில் உள்ள கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கும், அன்னதானம் உள்ளிட்டவை வழங்குவதற்கும் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்திருந்தனர். மேலும், இராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவதற்கும், கும்பாபிஷேக விழாவை நேரலையாக ஒளிபரப்பு செய்யவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்ததாகக் கூறப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனிடையே, இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது தொடர்பாக கடந்த 21-ம் தேதியிட்ட தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அச்செய்தியில், தடை தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையின் நகல்களும் இணைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், தினமலர் நாளிதழ் உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டதாகக் கூறி, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து மதுரை மேலமாசி வீதியிலுள்ள மதனகோபால சுவாமி கோவிலின் செயல் அலுவலர் சக்கரை அம்மாள் மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

அப்புகாரில், “21.1.2024-ம் தேதி வெளியான தினமலர் நாளிதழில், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் நிர்வாகத்தின் கீழ்வரும் கோவில்களில், 22.1.2024-ம் தேதி அயோத்தியில் இராமர் கோவில் திறப்பு விழா நடைபெறும் சமயத்தில், சிறப்பு பூஜைகள் செய்ய தடை உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

இச்செய்தி உண்மைக்குப் புறம்பானது என்பதோடு, வதந்தியை ஏற்படுத்தி, அதன் மூலம் சமூகத்தில் மத ரீதியான உணர்வுகளை தூண்டிவிட்டு, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட எதிரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதன் பேரில் தினமலர் நாளிதழ் மீது போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

Tags: policeFIRRam TempleAyodyaPran Pratishtha ceremonyDinamalarDaily News Paper
ShareTweetSendShare
Previous Post

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்வி கற்க வேண்டும் : சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல் !

Next Post

கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா… 70 கோடி ஏழை மக்களுக்கும் செய்யும் மரியாதை: அமித்ஷா!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies