14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு
Jul 5, 2025, 03:12 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

14-வது தேசிய வாக்காளர் தின விழா – குடியரசுத் தலைவர் பங்கேற்பு

Web Desk by Web Desk
Jan 25, 2024, 06:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற 14-வது தேசிய வாக்காளர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துக் கொண்டார்.

2023-ஆம் ஆண்டில் தேர்தலை நடத்துவதில், சிறப்பாக செயல்பட்ட மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகளுக்கு 2023-ஆம் ஆண்டிற்கான சிறந்த தேர்தல் நடைமுறைகள் விருதுகளை குடியரசுத் தலைவர் வழங்கினார். வாக்காளர்களின் விழிப்புணர்வுக்கு மதிப்புமிக்க பங்களிப்பை வழங்கிய அரசுத் துறைகள், ஊடக நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய துறையினருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி கூறியதாவது, நமது ஜனநாயகத்தின் பரந்த தன்மை, பன்முகத்தன்மை நமக்கு பெருமை அளிக்கிறது. நமது ஜனநாயகத்தின் பெருமைமிகு பயணத்தில் தேர்தல் ஆணையம் முக்கிய பங்காற்றியுள்ளது. இதுவரை 17 நாடாளுமன்றத் தேர்தல்களும், 400-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவைத் தேர்தல்களும் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், நியாயமான, அனைத்தையும் உள்ளடக்கிய தேர்தல் நடைமுறையை உறுதி செய்ததற்காக தேர்தல் ஆணையத்தின் தற்போதைய மற்றும் முந்தைய குழுவினரை பாராட்டினார்.

நமது நாட்டின் தேர்தல் நடவடிக்கைகளில் நவீன தொழில்நுட்பத்தை பெருமளவில் வெற்றிகரமாக பயன்படுத்தியிருப்பது உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளுக்கும் ஒரு முன்மாதிரியாகும். தேர்தல் நடைமுறை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் தொழில்நுட்பத்தை தேர்தல் ஆணையம் திறம்பட பயன்படுத்துவதை மேலும் மேம்படுத்த முடியும்.

நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், வசிக்கும் வாக்காளர்களுக்கு ஏற்பாடுகளை மேற்கொள்வது இலகுவானதல்ல. அனைத்து வகையான சவால்களையும் மீறி, தேர்தல் ஆணைய குழுவினர் இந்த கடினமான பணியை மேற்கொள்வதாகவும், இது நமது ஜனநாயகத்தின் மிகப்பெரிய சாதனையாகும். வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல முடியாதவர்களுக்கு வீட்டிலேயே வாக்களிக்கும் வசதியை வழங்கிய தேர்தல் ஆணையத்தை அவர் பாராட்டினார்.

நமது இளைஞர்கள் நமது ஜனநாயகத்தின் எதிர்காலத் தலைவர்கள். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையைப் பெற்ற இளம் வாக்காளர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த உரிமையைப் பெற்ற பிறகு, அவர்களின் கடமைகளும் அதிகரித்துள்ளன. தற்போது, கூடியுள்ள இளம் வாக்காளர்கள் நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களின் பிரதிநிதிகள் என்றும், 2047-ஆம் ஆண்டுக்கான பொன்னான இந்தியாவை உருவாக்குவதில், முக்கிய பங்காற்றுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாரிடமிருந்து ‘பொதுத் தேர்தல் 2024-க்கான தேர்தல் ஆணைய முன்முயற்சிகள்’ என்ற புத்தகத்தின் முதல் பிரதியை குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார்.

Tags: President Draupadi Murmunationalvotersday
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் : 2 நாட்களில் கோடிக்கணக்கில் நன்கொடை !

Next Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : முதல் நாள் முடிவு !

Related News

சீனாவை மிரட்டும் இந்தியா : கடலுக்கடியில் கண்காணிப்பு – ஆஸி.,யுடன் கைகோர்ப்பு!

சீனாவுக்கு செக் : கொழும்பு கப்பல் கட்டும் தளத்தை வாங்கிய இந்தியா!

சக்தியை நிரூபித்த இந்தியா : 3 வாரங்களாக கேரளாவில் தவிக்கும் F-35B போர் விமானம்!

ரிதன்யா தற்கொலை விவகாரம் : விசாரணையில் அரசியல் தலையீடு – பெற்றோர் பரபரப்பு புகார்!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது சிறுவன் : கேள்விக்குறியான தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு?

மேற்கு தொடர்ச்சி மலையில் அதிசயம் : வன விலங்குகள் மத்தியில் வாழும் “தனி ஒரு மூதாட்டி”!

Load More

அண்மைச் செய்திகள்

எப்போ சார் திறப்பீங்க? – குமுறும் பொதுமக்கள்!

100% சாலைகள் அமைத்து விட்டோம் என்று தமிழக அரசு பொய் கூறுகிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

எனக்கு IAS, IPS என யாரையும் தெரியாது – நிகிதா ஆடியோ வெளியீடு!

அஜித்குமார் கொலை : அரசு மாணவர் விடுதி அருகே காவல்துறை வாகனம் நிற்கும் சிசிடிவி வெளியீடு!

அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்து நயினார் நாகேந்திரன் ஆறுதல்!

கனமழையால் பாதித்த மாநில முதல்வர்களுடன் பேசிய அமித்ஷா!

விழுப்புரத்தில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் நூலகரை தரையில் அமர்த்தியதாக புகார்!

மக்கள் பிரச்னைகளில் தீவிர கவனம் செலுத்துகிறார் டெல்லி முதல்வர் – சக்சேனா

கிருஷ்ணகிரி : 13 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்த இளைஞர்கள் : 3 பேர் கைது!

மகாராஷ்டிரா : மராத்தி பேசாததற்காக தாக்குதல் – அமைச்சர் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies